23 ஏப்ரல், 2012

WORLD BOOK DAY-THALAVADY-PART-1

 அன்பு நண்பர்களே,வணக்கம்.
               தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                            இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்.
   ஆங்கில இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த மற்றும் இறந்த தினமான இன்று (ஏப்ரல் - 23) இலக்கிய மேதைகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும்,    அரியது அறிந்துகொள்ளும் வகையிலும்,இன்றைய இளைய சமுதாயம் தடுமாறி தடம் மாறுவதிலிருந்து தெளிவு பெற்று தன்னம்பிக்கை பெறும்வகையில் வாசிப்பை ஊக்குவிக்கும் விதத்திலும் உலக புத்தக தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
                           அதன் அடிப்படையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை (ஈரோடு மாவட்டம்) சார்பாக தாளவாடி பேருந்து நிலையத்தில் பள்ளிக்குழந்தைகளின்    DIVINE MATRIC SCHOOL-THALAVADY  வாசிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்,மற்றும் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.  
                 
   புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கும் முன்னதாக தாளவாடி ஊராட்சி மன்றத் தலைவர் மரியாதைக்குரிய .நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தை இன்றைய சமூகம் அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளின் வாசிப்பு விழிப்புணர்வு பேரணி போன்ற சமூக நல சேவைகளில் பங்கெடுத்தலை பாராட்டியும் உரையாற்றுகிறார்.மேலே உள்ள படம்.






           புத்தக வாசிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவியர் ஆர்வமுடன் விழிப்புணர்வு வாசக அட்டைகளுடன்.  

                      (ஆமாங்க! தமிழ்,கன்னடம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புத்தக வாசிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்) .  

           தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை செயலாளர் திரு. பிரவீன் குமார்,பட்டதாரி ஆசிரியர் அவர்கள் திரு.காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி அவர்களை துவக்கி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.மேலே உள்ள படம்.






            உலக புத்தக தின வாசிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கிறார் மரியாதைக்குரிய.காவல் ஆய்வாளர் அவர்கள்-தாளவாடி
 
   
     


  உலக புத்தக தின வாசிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவ,மாணவியர் நம்ம தாளவாடியில்..மேலே உள்ள படம்.

     
     புத்தக தினம் பேரணியில் ஆர்வமுடன் திரு.A.P.ராஜூ-அவர்கள் செயற்குழு உறுப்பினர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி . வாசிப்பு விழிப்புணர்வு வாசகங்களை உரக்க கோஷமிட அதனை ஆமோதித்தவாறே டிவைன் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் ஊர்வலம்  . மேலே உள்ள படம்.

  
  
 
                  உலக புத்தக தினம் (WORLD BOOK DAY) விழிப்புணர்வு பேரணியில் (1)திரு.காவல்துறை உதவி ஆய்வாளர்- அவர்கள் (2) தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், (3)பனகஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், (4)சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி-வேடர்நகர்- இடைநிலை ஆசிரியர் (5) சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி-செண்பகப்புதூர்-இடைநிலை ஆசிரியர் மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர்களும்,சமூகஆர்வலர்களும் கலந்து கொண்ட காட்சி.மேலே உள்ள படம்.






    தாளவாடியில் அமைந்துள்ள  உலக சமூக ஒற்றுமைக்கே எடுத்துக்காட்டாக அமைந்து விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்து முஸ்லீம் கோவில்களின் முன்புறம்  WORLD BOOK DAY AND COPYRIGHT DAY பேரணியில் ஊக்கமளிக்கும் விதமாக முன்னேறிச் செல்லும் தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு.L.சிவக்குமார் அவர்கள் . அவரைத் தொடர்ந்து திரு.A.P.ராஜூ அவர்கள்அவர்கள் மற்றும் சத்திப்பகுதியை சேர்ந்த  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிஇடைநிலை ஆசிரியர்கள் ,இவர்களுடன் இணைந்து டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகள் மேலே உள்ள படம்.



     
 
  '' புத்தகம் வாசிப்போம்,புத்தாக்கம் பெறுவோம்''-
                                            என உறுதி ஏற்று மேடையில்அமர்ந்திருப்பவர்கள்  இடமிருந்து வலமாக .1) திரு.M.பால கிருஷ்ணன் அவர்கள் இடைநிலை ஆசிரியர்,வேடர்நகர்,சத்தி.2)திரு.வியானி அவர்கள்-டிவைன் மெட்ரிக் பள்ளி தாளாளர்,தாளவாடி.3)திரு.கா.தங்கவேல் அவர்கள்,காவல்துறை ஆய்வாளர்-தாளவாடி, 4)திரு.C.பரமேஸ்வரன் அவர்கள், தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை. 5)திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை .முதல் வரிசையில் நின்றிருப்பவர்கள் வலமிருந்து இடமாக 1) திரு.S.பிரவீன்குமார் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி,சூசைபுரம், மற்றும் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி 2)திரு.L.சிவக்குமார் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர்.3)டிவைன் மெட்ரிக் பள்ளி ஆசிரியை அவர்களுடன் டிவைன் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவியர்-தாளவாடி 4)இடது கடைசியில் நிற்பவர் சத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி- செண்பகப்புதூர் இடைநிலை ஆசிரியர் அவர்கள்- மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர் . அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்கள் தாளவாடிப்பகுதி சமூக ஆர்வலர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர்களும்,உறுப்பினர்களும்.


                                                  தொடர்ச்சி..................... அடுத்த பதிவில் காணவும்.
                              என 
                  TAMIL NADU SCIENCE FORUM-
                                 THALAVADY-
                        ERODE DISTRICT.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக