23 ஏப்ரல், 2012

WORLD BOOK DAY-THALAVADY-PART-2

 அன்பு நண்பர்களே, வணக்கம்.
                      உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினவிழா-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை சென்ற பதிவின் தொடர்ச்சி..........
      
                

       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை செயலாளர்,திரு.S.பிரவீன்குமார் பட்டதாரி ஆசிரியர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி-சூசைபுரம்-தாளவாடி அவர்கள்-  தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் மரியாதைக்குரிய நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் முன்னிலையில்  தாளவாடியில் பேருந்து நிலையத்தில் நடைபெறும் உலக புத்தக தின விழிப்புணர்வுப்பேரணி,புத்தகக் கண்காட்சி  மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள  அனைவரையும் இனிதே வரவேற்றுப் பேசினார்.அதுவும் கவிதைநடையில் செவிக்கு உணவாக இன்புறும் விதத்தில் வரவேற்றார்

                 


    ''WORLD BOOK DAY ''விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் திரு. C.பரமேஸ்வரன் -தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளைஅவர்கள்  தமது தலைமைஉரையில்,
                     மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான கண்டுபிடிப்பு ''புத்தகம்''தான் என்றார், அனைத்து உயிரினங்களும் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியான வாழ்க்கைமுறை நடத்தி வருகின்றன.ஆனால் மனித சமுதாயம் மட்டும் ஒரு தலைமுறை விட்டுச்சென்ற இடத்தில் தனது வாழ்க்கையை அடுத்த தலைமுறை துவக்குகிறது என்றார்.இந்த மாற்றத்திற்கு காரணம் நம் முன்னோர்கள் அவர்கள் அனுபவங்களை,கண்டுபிடிப்புகளை, நிறைகுறைகளை   அதாவது வரலாறாக,அறிவியலாக,இலக்கியமாக,தொழில்நுட்பமாக  பலதுறைகளைச் சார்ந்த புத்தகங்களாகஎழுதி வைத்துச்சென்றுள்ளனர்.அந்த புத்தகங்களைப் படித்து தெளிவு பெற்று நமதுவாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை  ஏற்படுத்திக்கொள்கிறோம்.என்றார். நமக்கும் புத்தகத்திற்கும் உள்ள உறவு பள்ளிகளில் தொடங்கினாலும் அந்தப்புத்தக உறவு நமது இறுதிக்காலம்வரை தொடர்கிறது என்றார். நல்ல புத்தகங்களைப்படித்து நல்ல ஒழுக்கங்களைப் பின்பற்றி சமூகத்தில் மதிப்புமிக்க மனிதனாக வாழ்வோம்,வாழ்ந்து காட்டுவோம் என உறுதி ஏற்போம்.என்றார்.இனி வருடந்தோறும்  இந்த மலைப்பகுதி மாணவர்களுக்காக உயர்கல்விக்கான இலவச வழிகாட்டி மையம் செயல்படுத்தப்படும். புத்தகக் கண்காட்சியும்,அறிவியல் செய்முறைக் கண்காட்சியும் நடத்தப்படும்.அதற்காக இந்த மலைப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பங்கு பெறச் செய்யப்படும்.என்றார்.முதல் கட்டமாக வருகிற ஜூன் மாத இறுதியில் டிவைன் மெட்ரிக் பள்ளியில் மேற்கண்ட கண்காட்சியினை நடத்தப்படும்.இப்பகுதியில்   உயர்கல்விக்கான இலவச கல்வி வழிகாட்டி ஆலோசனை கொடுக்க  கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய முனைவர்.R.செல்லப்பன்.அவர்கள்  கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்களைக்கொண்டு ஆலோசனை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள படிப்புகள் தவிர கூடுதலாக அனைத்து துறைகளிலும் உள்ள இந்த மலைப்பகுதிக்கேற்றவாறு ,இம்மாணவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு,வசதிக்கேற்றவாறு,சூழ்நிலைக்கேற்றவாறு,
தகுதிக்கேற்றவாறு எந்த கல்லூரிகளில் என்னென்ன பிரிவுகள்,துறைகள் உள்ளன.இலவசக்கல்வி,மிகக்குறைந்த கட்டணத்தில் கல்வி,வேலை வாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்பு என முடிந்தவரை தகுந்த ஆலோசனை கொடுக்கப்படும்.அதனை மாணவர்கள் விருப்பம்போல் கல்லூரிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.என கூறி உள்ளார்.அதற்காக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்வதாகக் கூறி தமது உரையினை நிறைவு செய்தார்.







            ''உலக புத்தக தின விழா-ஓர் அறிமுகம்'' என்ற தலைப்பில் துவக்கவுரை ஆற்றிய செயற்குழு உறுப்பினர் திரு.ராஜூ அவர்கள் உரையில் ஆங்கில இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் அதிகமாக பிறந்ததும் மற்றும் இறந்ததும் ஆன ஏப்ரல் -23ந்தேதியை இலக்கிய மேதைகளைக் கவுரவப்படுத்தும் வகையிலும்,இலக்கிய மேதைகளை நினைவு கூர் வகையிலும் பன்னாட்டு கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் அறிவிப்பின் பேரில் 1995-ஆம் ஆண்டு முதல் உலக புத்தக தினவாழாவாக அனைத்து நாடுகளும் அனுசரித்து வருகின்றன. 
       நமது தாளவாடி மலைப்பகுதி மக்களும்  பயன்பெறும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக இதுவரை புத்தகக்கண்காட்சியே போடப்படாத நமது தாளவாடியில்  முதன்முதலாக புத்தகக்கண்காட்சி போடப்பட்டுள்ளது.அனைவரும் புத்தகம் வாங்க வாருங்கள் என்பதை விட அனைவரும் இங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிடுங்கள்.எடுத்து வாசித்துப்பாருங்கள்.மாலைவரை இங்குள்ள தங்களுக்குப்பிடித்தமான புத்தகங்களை எடுத்து இங்கு போடப்படுள்ள இருக்கைகளில் அமர்ந்து வாசிப்பை நேசியுங்கள்..தங்களது மேலான கருத்துக்களை இங்கு வைத்துள்ள கருத்துப்பதிவேட்டில் குறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் பதிவிடுங்கள்.தயவுசெய்து வாழ்த்துரை,பாராட்டுரை பதிவிட வேண்டாம்.எனக் கூறினார்.


    

   அடுத்து உரை ஆற்றிய (DIVINE MATRIC SCHOOL) டிவைன் மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு.வியானி அவர்கள்  புத்தகம்-நல்ல நண்பன் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அவர்தமது உரையில்    புத்தகம்  (மின்தடை காரணமாக பதிவு முழுமையடையவில்லை பொருத்தருளவும்)



        



  அடுத்து "வாசிப்போம்-நேசிப்போம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய திரு.பால கிருஷ்ணன் இடைநிலை ஆசிரியர் அவர்கள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடியிலிருந்து தாளவாடி வரை வாசிப்பால் நேசித்த அனுபவத்தை மிக நன்றாக பகிர்ந்து கொண்டார். ஒரு நல்ல புத்தகத்தில்  ஓராயிரம் மட்டுமல்ல ஆயிரமாயிரமான அறிவுப் பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன.நாம் புத்தகத்தை வாசித்து பழக்கப்படுத்திக்கொண்டோமானால் அதில் கிடைக்கும் நிம்மதி,சந்தோஷம்,மன திருப்தி,வேறு எதிலும் கிடைக்காது.தொழில் நுட்பங்கள்,  நமது முன்னோர்கள் ,அறிவியல் அறிஞர்கள் , வில்லியம் ஷேக்ஸ்பியர்,செர்வாண்டஸ் போன்ற உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் ,    வரலாறுகள்,நீதிக்கதைகள்,கவிதைகள்,நாடகங்கள் என அத   




(மின்தடை காரணமாக பதிவு முழுமையடையவில்லை பொருத்தருளவும்)







    நிறைவாக திரு.பாலகிருஷ்ணன் பொருளாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்-தாளவாடி நன்றியுரை ஆற்றினார்.(மின்தடை காரணமாக பதிவு முழுமையடையவில்லை பொருத்தருளவும்)
    







                       
      



    









      

























புத்தக கண்காட்சி பற்றிய கருத்து பதிவிடுகிறார்










காவல் துறை மட்டுமல்ல,தாளவாடியில் முதன்முதலாக புத்தகக்கடை வைத்து கடந்த முப்பது வருடங்களாக புத்தக கடை நடத்தி வரும் அனுபவசாலி அவர்களும் புத்தகத்தை பார்வையிட்டு முதல் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தும் நல்ல ஆலோசனை வழங்கியும் சென்றார்.



























தாளவாடியின் முக்கிய நபர்களில் ஒருவர் தமது கருத்தினை கருத்துப்பதிவு நோட்டில் பதிவிடுகிறார்.அதனை கூர்மையாக கவனிக்கும் நமது நண்பர் திரு.ராஜூ அவர்கள்




   பெண்களும்










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக