09 நவம்பர், 2012

அறிவியலைப் பரப்புவோம்! நாட்டின் வளர்ச்சியைப் பாதுகாப்போம்!!

மரியாதைக்குரிய நண்பர்களே,

      

(1)தீபாவளி நிகழ்ச்சியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம்.
(2)விபத்தின்றி,தீக்காயமின்றி கொண்டாடுவோம்.
(3)வாணவேடிக்கையின்போது பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் கருகி, சிதறிப்போன தொழிலாளிகளை நமது நினைவில் வைப்போம்.அவர்தம் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் அஞ்சலி செலுத்துவோம்.
(4)சுற்றுச்சூழல் பாதிக்காவண்ணம் கொண்டாடுவோம்.
(5)தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவும்,தொழிலாளர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்து மனித உயிர்களைக் காப்பது அரசின் கடமை,எனவே அரசாங்கத்திடம் வலியுறுத்துவோம்.
(6)அபாயகரமான வெடிகளைத் தவிர்ப்போம்.
(7)ஒலிமாசு குறைக்க சத்தம் குறைவான வெடிகளை வெடிப்போம்.
(8)மிதக்கும் தூசிகளைக் குறைக்க பட்டாசுகளை வாங்குவதையே தவிர்ப்போம்.
(9)வெடிகளின்போது கண் கண்ணாடி அணிந்து கண்களைக் காப்போம்.
(10) உடலைப் பாதுகாக்க பருத்தி ஆடைகளை அணிவோம்.
(11) சிறுவர்களையும்,சமூகத்தையும் பாதுகாக்க பட்டாசுகளின் ஆபத்தையும்,தீமைகளையும் தெரிந்து கொள்வோம்.

  என  சமூகப்பணியில் ;-
 PARAMESWARAN.C
TNSTC - DRIVER,
TAMIL NADU SCIENCE FORUM,
THALAVADY - SATHY-
ERODE - DT.

02 அக்டோபர், 2012

கணித மேதை ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விழா-2012

02 அக்டோபர் 2012

 


தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம். வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளிக்கும் விதமாக T.N.S.F.ஈரோடு- சார்பாக நடந்து வரும் நிகழ்வுகள் பற்றி இங்கு காண்போம்.
  

   இன்று (02-10-2012) ஈரோடு மாநகர்-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கணித மேதை ராமானுஜர் 125-வது ஆண்டுவிழா வரவேற்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

 முடிவற்றதைக் கண்ட மாமனிதன் கணித மேதை ராமானுஜர் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆண்டை மத்திய அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையத்தின் வழிகாட்டுதல் பேரில் கணித மேதை பிறந்த ஈரோட்டிற்கு பெருமை சேர்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மையத்தின் பொறுப்பில் நிறைவுவிழா நடத்த அறிவுறுத்தியதன் பேரில் இந்த வரவேற்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு  பேரா.V.பெருமாள் அவர்கள்  TNSF மாவட்ட துணைத் தலைவர்,அவர்கள் தலைமை ஏற்றார்.

திருமிகு.R.மணி அவர்கள் TNSF மாவட்டச் செயலாளர்,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் DR.பேரா.N.மணி அவர்கள் விளக்கவுரை நிகழ்த்தினார்

மரியாதைக்குரிய கணிதத்துறை பேராசிரியப்பெருமக்கள் உரைநிகழ்த்திய காட்சிகள்.











 திருமிகு.R. சக்கரவர்த்தி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உரையாற்றிய காட்சி


 மரியாதைக்குரிய,ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி

    திருமிகு.ஆ.கதிரேஷ் அவர்கள், கணித ஆசிரியர் . (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தட்டக்கரை-அந்தியூர்) உரை நிகழ்த்திய காட்சி.







 திருமிகு.பா.ஸ்ரீதர் அவர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு) உரை நிகழ்த்திய காட்சி.


 திருமிகு.M.பாலு அவர்கள் (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியல் கல்லூரி)உட்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.


 திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ERODE-) நன்றியுரை நிகழ்த்திய காட்சி.
    {இக்கூட்டத்தில் திருமிகு.சி.பரமேஸ்வரன் அவர்கள் (தலைவர்-தாளவாடி ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) உட்பட மேலும் பல கணித ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் உரை நிகழ்த்தினர்.}

   
     தேசிய கணித ஆண்டின் நிறைவு விழாவின் வரவேற்புக்குழுவிற்கு  


     தலைவராக- 
    திருமிகு.M.பாலகிருஷ்ணன் அவர்களும்
   (முன்னாள் செயலாளர்-கொங்கு கல்வி நிலையம் -ஈரோடு)
செயலாளராக 
   திருமிகு.R.மணி அவர்களும்
  (மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு)  துணைத்தலைவர்களாக 
     (1)திரு.M.பாலு அவர்கள்
   (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியற் கல்லூரி)
   (2)Dr.நாகராஜ் அவர்கள் (கணிதத்துறை தலைவர்-கொங்கு கலை அறிவியல் கல்லூரி) 
    (3)Dr.V.பெருமாள் அவர்களும் (T.N.S.Fஈரோடு.மாவட்ட துணைத் தலைவர்)     
(4)பேரா.R.விஸ்வநாதன் அவர்களும்(கொங்கு பொறியியல் கல்லூரி)

இணைச்செயலாளர்களாக 
   (1)திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்
 (தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஒன்றியம்)(2)திருமிகு,P.ஸ்ரீதர் ஆசிரியர் அவர்களும்
 (அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு வட்டார வள மையம்) (3)மரியாதைக்குரிய,பேரா. மேரி டயானா அவர்களும்
   (பாரதிதாசன் கலைக்கல்லூரி) 
  (4)திருமிகு.N.வேலுமணி அவர்களும்
   (செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)(5)திருமிகு.N.சண்முக சுந்தரம் ஆசிரியர்  அவர்களும்,
   குழு உறுப்பினர்களாக 
   ஈரோடு மாவட்ட TNSF செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது மற்றும் 
  மரியாதைக்குரிய டாக்டர்,பேரா.N.மணி அவர்கள் (T.N.S.F.மாநிலத்தலைவர்) தேசிய கணித ஆண்டின் நிறைவுவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொண்டு வழிகாட்டுவது.என இக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்) நன்றியுரை வழங்கினார்.





PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY - SATHY
ERODE-DT.  
  

 
 

19 செப்டம்பர், 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண:     அன்பு நண்பர்களே,வணக்கம்.          தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ,மாநில தலைவர் அவர்களது கட்டுரை -TNSFTHENI.BLOGSPOT.COM வாயிலாக.......    ...

புத்தகங்களுடன் இலவச அலமாரி-ஈரோட்டில்



அன்பு நண்பர்களே,வணக்கம். 
             கடந்த 17-9-2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் திருமிகு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள்  அருமையான யோசனை ஒன்று தெரிவித்தார். 
             அதாவது எந்தப்பகுதியைச்சேர்ந்தவர்களானாலும் சரிங்க! புத்தக அலமாரி மற்றும் அறிவியல் உட்பட நல்ல தரமானபுத்தகங்களை வழங்கலாம். அதாவதுங்க!  பள்ளிகளுக்கோ,பொது இடங்களுக்கோ,விழாக்களுக்கோ,அனாதை இல்லங்களுக்கோ,பயிற்சி நிலையங்களுக்கோ,பெரிய பெரிய கம்பெனிகளுக்கோ,தொழிற்சாலைகளுக்கோ,மருத்துவமனைகளுக்கோ,முதியோர் இல்லங்களுக்கோ,தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கோ,அறிவுச்செல்வங்களைப்பெருக்க விருப்பமும் ஆர்வமும் உள்ள நன்கொடையாளர்கள் அன்பளிப்பாக கொடுக்கவோ அல்லது விருப்பமுள்ளவர்கள் விலைக்கு பெற்றுக்கொள்ளவோ தாங்கள் செய்ய வேண்டியது ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் கொடுத்தால் போதும். ஐந்தாயிரத்திற்கு உண்டான நல்ல தரமான புத்தகங்களுடன் இலவசமாக அந்த புத்தகங்களை அடுக்கி வைக்க கண்ணாடிபொருத்திய புத்தக அலமாரி கொடுக்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி மையம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்தில் கருத்துரையில் பதிவிடவும். அல்லது அருகில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களை அணுகவும்.

வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி


                    முயற்சிகள் தவறலாம்! முயற்சிக்க தவறக்கூடாது!!


 அன்பு நண்பர்களே,வணக்கம். 
                            நமது ஈரோடு மாவட்டம்- சத்தி வட்டம்- தாளவாடி ஊராட்சி ஒன்றியம் வட்டாரப்பகுதிவாழ் 'பிறமொழி' பேசும் மக்களுக்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(தாளவாடி மையம்)
        மற்றும்  டிவைன் மெட்ரிக் பள்ளி (தாளவாடி)உடன்  இணைந்து  தமிழ் மொழிப்பயிற்சி மையம்  ஏற்படுத்தி உள்ளது. 
          இந்த மொழிப்பயிற்சி மையம் தாளவாடி கொங்கள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ள தொட்ட காஜனூர்  டிவைன் மெட்ரிக் பள்ளியில் 18-09-2012 அன்று முதல் நடைபெறுகிறது.விருப்பமும்,ஆர்வமும் உள்ள இளைஞர் முதல் வயதானவர் வரை சாதி, மத, இன, மொழி, வயது ,பாலினம் வேறுபாடு இன்றி அனைவரும்  கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம்.இப்பயிற்சி சமூக நலன் கருதி இலவசமாக நடத்தப்படுகிறது.

        மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் - காரணம்.
      
               இத்தாலி நாட்டைச் சேர்ந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" (Constantine joseph beschi) என்னும் பெயருடைய கிறித்துவப் பாதிரியார் அவர்கள் கிறித்துவ சமயம் பரப்ப 1710 ஜூன்மாதம் 'லிஸ்பனில்' புறப்பட்டு 'கோவா' (இந்தியா) வந்து அங்கிருந்து 'கொச்சி' வந்து பிறகு கால்நடையாக 'அம்பலக்காடு' வந்து தங்கி மதுரையில் 'காமநாயக்கன்பட்டி' வந்து சேர்ந்தார்.
              தமிழ் உட்பட ஒன்பது மொழிகள் கற்றிருந்த போதிலும் தமிழின் இனிமை மற்றும் பெருமையினை உணர்ந்து   இத்தாலி மொழியிலிருந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" என்ற தனது பெயரை "தைரிய நாதன்" என மாற்றினார்.பிறகு அந்தப்பெயர் வடமொழி என அறிந்து மீண்டும் "வீரமாமுனிவர்" என தனது பெயரை மாற்றி தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டார்.
          முதன்முதலாக பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தார்.மேலும் தமிழில் எழுத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்து எளிமையாக்கினார்.செய்யுள் நடையில் இருந்த 'சதுரகராதி' யினை பேச்சுத்தமிழில் படைத்தார்.அதனால் 'தமிழ் அகராதிகளின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
                 இலக்கியப்படைப்புகளை உரைநடையில் அறிமுகப்படுத்தினார்.இவருக்கு முன்னரே "தத்துவ போதகர்" (1577-1656) இவரது இயற்பெயர் "இராபர்ட் டி நொபிலி" (Robert de nobili) என்னும் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கிறித்துவ பாதிரியார் சமயம் பரப்ப இந்தியா வருகை தந்த போது  முதன்முதலாக  பிறமொழிக்கலப்போடு தமிழில் உரைநடை எழுதியுள்ளார்.எனினும் வீரமாமுனிவர் பிறமொழிக்கலப்பின்றி தூய தமிழில் உரைநடை எழுதினார்.
             உரைநடையில் வேதவிளக்கம்,வேதியர் ஒழுக்கம்,ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம்,பரமார்த்த குருவின் கதைகள்,வாமன் கதை, திருக்காவல் ஊர்க்கலம்பகம்,கித்தேரி அம்மன் அம்மானை, தேம்பாவனி என 23 உரைநடைகள் எழுதி உள்ளார்.உலகப்பொதுமறை நூலான திருக்குறளை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
         இவ்வாறு செய்யுள்,உரைநடை,இலக்கணம்,அகராதி,மொழி பெயர்ப்பு,காவியம் என தமிழ்த்துறையில் பல சிறப்பான படைப்புகளை தந்து தமிழுக்காக செய்த தொண்டின்  நினைவாக  தாளவாடியில் மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் இட்டு அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளோம்.

      வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்ப்பேட்டை அருகில் (6கிலோமீட்டர் தூரத்தில்)உள்ள கோணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகிமாதா கோவிலில் அமைந்துள்ளது.
           வீரமாமுனிவரின் சரித்திரத்தை 1822-இல் வித்துவான் முத்துசாமிபிள்ளை அவர்கள் தமிழில் எழுதி வெளியிட்டு உள்ளார்.

TNSF ERODE பொதுக்குழு கூட்டம்-2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் 

 

 

      அன்பு நண்பர்களே,வணக்கம். 

             17-09-2012 இன்று மாலை5-30 மணிக்கு தமிழ்நாடுஅறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் TNGEA - அலுவலகத்தில்  நடைபெற்றது.


      மாநிலத்தலைவர் பேரா.ந.மணி அவர்கள் பொதுக்குழுக்கூட்டத்தில் விவாதித்த காட்சி.அருகில் திரு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.




      மாவட்ட செயலாளர் திரு.ர. மணி அவர்கள் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றி  ஏட்டில் பதிந்த காட்சி.அருகில் மரியாதைக்குரிய ரேவதி அம்மையார் அவர்கள் மலாய் சென்று கற்பித்தலில் எளிமை பற்றி ஆய்வுநூல் எழுதி சமர்ப்பித்து அதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் ஆய்வு நூலை பார்வையிடும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.

        பொதுக்குழு கூட்டத்தில்  முக்கிய நிகழ்வாக கணித மேதை இராமானுசர் பிறந்த ஊரான நமது மாவட்டத்தலைநகராம் ஈரோடு என்பதை வெளிநாடுகளைச்சேர்ந்த ஆய்வாளர்கள், கல்வியாளர்கள்,கணித மேதைகள்,அறிஞர்கள் அறிந்து அதன்விளைவாக நமது ஈரோடு நகருக்கு வருகை தந்து கணித மேதை இராமானுசர் பிறந்த வீட்டை அடையாளம் கண்டு செல்கின்றனர்.அவர்களுக்கு வழிகாட்டியாக பேரா.ந.மணி அவர்களே செயல்பட்டு கணித மேதை பிறந்த வீட்டை அடையாளம் காட்டி வருவதை சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த கட்டமாக கணித மேதை 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி இந்த வருடத்தை நமது அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்து வருடம் நிறைவடைவதை ஒட்டி நிறைவு விழாவினை நமது ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக திரு.சக்கரவர்த்தி அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
         அடுத்து உரையாற்றிய திருமிகு. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகள் உட்பட பொதுஇடங்களில் விருப்பமுள்ள புரவலர்களைக்கொண்டு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நூலக அலமாரியுடன் சேர்த்து வழங்கும் அற்புத யோசனையை தெரிவித்தார்.அதற்கான விபரம் வேண்டுவோர் தமிழ்நாடு அறிவியல் இயகம்-ஈரோடு மாவட்ட நண்பர்களை அணுகவும்.அல்லது இங்கு கருத்துரை இடவும்.ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் புத்தக அலமாரி இலவசமாக வழங்கப்படும்.என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.


  

22 ஜூலை, 2012

ஆற்றல் வளம்



    

          மரபுசாரா ஆற்றல் வளம் என்பது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு மாற்றான ஆற்றல் வளம் ஆகும்.

மரபு சார்ந்த ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்..
Ø படிம எரிபொருள் ஆற்றல் (Fossil fuel energy)
Ø விறகு (Fire wood) மூலம் கிடைக்கும் ஆற்றல்
Ø நீர் ஆற்றல் (Hydraulic energy)
Ø அணு ஆற்றல் (Nuclear energy)
மரபு சாரா ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்
ü சூரிய ஆற்றல் (solar energy)
ü காற்றின் ஆற்றல் (Wind energy)
ü கடல் அலை ஆற்றல் (Sea wave energy)
ü கடல் மட்ட ஆற்றல் (Tidal energy)
ü புவி வெப்ப ஆற்றல் (Geo thermal energy)
ü உயிரியல் வாயு ஆற்றல் (Bio gas energy )
ü உயிரியல் பொருண்மை ஆற்றல் (Bio mass energy)
ü உயிரியல் எரிபொருள் ஆற்றல் (Bio fuel)
     

ஆற்றல் வளங்கள்-2012- NCSC

அன்பு நண்பர்களே,
    இனிய வணக்கம்.
     தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2012க்கான ஆய்வுத்தலைப்பு '' ஆற்றல்'' அது பற்றிய விபரம் காண்போம்.
       மின்சாரம் உற்பத்திக்கும் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான ஆற்றலுக்குத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தவை மரபு சார்ந்த ஆற்றல்கள் (Conventional energy) எனப்படுகின்றன. பெருகி வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாதனவாக இவை உள்ளன. திரும்பத் திரும்ப உற்பத்தி செய்ய இயலாதனவாகவும் இருக்கின்றன. மரபு சார்ந்த ஆற்றல்கள் பல, சுற்றுச் சூழல் கேட்டினுக்கும் காரணமாக உள்ளன. இவ்வகை ஆற்றல்களைப் புதுப்பிக்க இயலாத, தீர்ந்து போகக் கூடிய ஆற்றலகள் (Non renewable energy) எனவும் சொல்லலாம்.
            
        நிலக்கரி, பெட்ரோலியம், மற்றும் இயற்கை எரி வாயு ஆகியனவற்றைப் படிம எரிபொருள் ஆற்றல் தருவன எனக் குறிப்பிடலாம். பல கோடி ஆண்டுகளுக்கும் முன்னர் பூமியில் புதையுண்ட தாவரம் மற்றும் விலங்குகள், மக்கிப் போய்ச் சிதைவடைந்ததால் உண்டானதே படிம எரிபொருளாகும். இவை பூமியில் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. புதிதாக உற்பத்தி ஆக இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம். ஆனால் தொடர்ந்து இவற்றைப் பயன் படுத்திக் கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில் இவை தீர்ந்து போகலாம். மேலும் இவற்றையும், பல காலமாக எரிபொருளாகப் பயன்பட்டு வரும் விறகையும் பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியிடப்படுகிறது. இது சுற்றுச் சூழல் தூய்மைக் கேட்டினை உருவாக்கும். மேலும் புவி வெம்மை எனும் பெரும் கேட்டினையும் விளைவிக்கும். புவி வெப்பமடைந்தால் கடல் மட்டம் உயருதல், நிலப் பரப்புக்கள் நீரில் மூழ்குதல், பனிப் பாறைகள் உருகுதல், அமில மழை பொழிதல், பருவ நிலை மாற்றம் அடைதல், வெள்ளம், புயல் போன்றவற்றால் பேரிடர்கள் விளைதல் போன்ற பல தீங்குகள் நிகழும்.
நீர் மின்சக்தி உற்பத்தி செய்வதில், ஏராளமான பொருட் செலவுக்கு ஆளாவது, தகுதியான இடம் இல்லாதது, கட்டுமானத்தினால் சுற்றுச் சூழல் பாதிப்பு அடைவது, அதிகப்படியான இழப்பீடுகள் தர வேண்டியிருப்பது, உற்பத்தி செய்த மின் சக்தியைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்வதால் இடைஞ்சல்களுக்கு ஆளாவது எனப் பல சிக்கல்கள் உள்ளன.

07 ஜூன், 2012

புத்தக வாசிப்புப் பழக்கம்



புத்தக வாசிப்புப் பழக்கம் என்ன செய்யும்?


       சுயகல்வியைத் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை சகலவழிகளிலும் மேம்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு மாறாக சுயகல்வியின் மீது பற்று இல்லாத அல்லது அதற்கான முயற்சிகள் கூட இல்லாதவர்களாக பலர் உள்ளனர். 

அவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், பல்வேறு இன்னல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் உலகில் ஒருவித அச்சத்துடனேயே வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்க்கையை கடக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவ்வாறு உள்ளவர்கள் எதிலும் ஈடுபாடு இல்லாதவர்களாக காலப்போக்கில் மாறி வருகிறார்கள் அது ஒரு இயந்திரத்தனமாக வாழ்வை அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

எனவே சுயகல்விப் பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை உரிய வகையில் அமைத்துக்கொண்டு சமூக மாறுதலுக்கான பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாக மாற முடியும்.

தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை மேம்படுத்தும். அதேபோல் நாம் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்துவதில் ஒரு முக்கியமான அம்சம் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என்பதாகும். கற்றுக்கொடுப்பது என்பதில் நாம் படித்தவைகளைத் தொடர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அல்லது ஒருவிஷயத்தைப் பற்றி மற்றவர்களுடன் விவாதங்களை நடத்துவது, கூட்டாகப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம்.

கற்பதும், கற்றுக்கொடுப்பதும் இணைந்ததாக வாழ்வு அமைந்தால் மனிதனின் வாழ்வு முன்னேற்றகரமாக அமையும். கற்பதும் கற்றுக்கொடுப்பதும் ஒரு உன்னதமான பணியாகும்.
 
    நன்றி;- புதுவை அறிவியல் இயக்கம்.

சோதிடத்திற்கு அடித்தளம் -அறியாமையும் அச்சமுமே



அறியாமையும் அச்சமுமே சோதிடத்திற்கு அடித்தளம்


அறிவியல் மனநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்கே சோதிடம் எதிரானது. ஆனால் நம் நாட்டின் பெரும் பாலான மக்களுக்கு சோதிடமே உந்துசக்தியாக இருக்கிறது. படிப்பறி வற்றவர்கள்தான் இந்த மோகத்திற்கு பலியாவார்கள் என்பதும் இல்லை. படித்தவர்களை சோதிட அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கக்கூடியதாக அவர்கள் படிக்கும் படிப்பு இல்லை. மேலைநாட்டு சோதிடமாக இருந்தா லும் சரி, இந்திய சோதிடமாக இருந்தாலும் சரி.. அதில் அறிவியலுக்குப் பொருந்திவரக் கூடிய தன்மைகள் அறவே கிடையாது. மனிதர்களின் அறியாமை மற்றும் அச்சம் இரண்டின் விளைவாக உருவானதே சோதிடம் என்று சொல்வது மிகையாகாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் வானத்தைக் கூர்ந்து பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள் என்பது உண்மை.
ஆனால் அவர்கள் கண்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்களால் அறிவியல் விளக்கம் சொல்ல இயலவில்லை. இரவு வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் வடிவ அமைப்புகள் மாறுவது, சந்திரனின் வளர்பிறை தேய்பிறைகள், நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிக்கும் கிரகங்களின் சஞ்சாரங்கள், எங்கிருந்தோ தோன்றி பிறகு மறையும் வால்நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி நிகழ்வுகள் பற்றி சரியான விளக்கம் அளிக்கும் அள வுக்கு அன்றைய அறிவியல் வளர்ந் திருக்கவில்லை. ஆதிகால மனிதர் களுக்கு இவை எல்லாமே அதிசயங் களாகத் தோன்றியிருக்க வேண்டும். சில பிரகாசமான நட்சத்திரங்கள் சேர்ந்து குறிப்பிட்ட சில உருவங்கள் போல் தோன்றுவதே நட்சத்திரக் கூட்டங்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சில நிகழ்ச்சிகள், விண்ணில் அவர்கள் பார்த்த நட்சத்திரக் கூட்டங்கள் அல்லது கிரகங்களின் சஞ்சாரத்தோடு தொடர்புடையவையாக அவர்களுக் குத் தோன்றியிருக்கக் கூடும். விண் ணில் உள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவை தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சக்தி கொண்டவை என அவர்கள் நம்புவ தற்கு இத்தகைய தற்செயல் ஒற்றுமை நிகழ்வுகள் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ தொலைநோக்கி போன்ற சாதனங்களோ இல்லாத காலத்தில் - வானவியல் ஒரு அறிவியல் துறையாக பெருமள வுக்கு வளராத காலகட்டத்தில் - தோன் றியவை என்பதை நாம் நினைவில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொள் வது நல்லது.
முன்காலத்தில் வால் நட்சத்திரங்கள் தோன்றுவது மர்மமாக இருந்ததால் அவை பீதியைக் கிளப்பின. இன்று அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே செல்கின்றன என்ற விவரங்கள் நமக்குத் தெரிந்த ரகசியங்கள் ஆகிவிட்டதால் மர்ம முடிச்சுகளும் அகன்றுவிட்டன. விண்ணில் ஏவப்பட்ட கலங்கள் பல கிர கங்களின் அருகே சென்று கிரகங்களின் தன்மைகள் பற்றி ஆய்வுகளை நடத்தி விட்டன. சில கிரகங்களில் விண்கலங் கள் இறங்கியே கூட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சந்திரனில் மனி தர்களே இறங்கி நடை பயின்ற அதிசயம் கூட நிகழ்ந்துவிட்டது. காலம் காலமாக மனிதனின் கற்பனைக்கு வளம் சேர்த்த சந்திரனை இன்று மனித சக்தி தொட்டுப் பார்த்துவிட்டது. பூமி எந்தெந்த தனி மங்களால் ஆனதோ, ஏறக்குறைய அதே தனிமங்களால் ஆனவைதான் மற்ற கிரகங்கள் என்ற உண்மையும் விண்வெளி ஆய்வுகளால் தெளிவாகி விட்டது. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதையும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உண்மையான தன்மைகள் என்னவென்பதையும் அறிவியல் இன்று தெளிவாக விண்டுவைத்துவிட்டது. நட்சத்திரங்களில் சூரியனைத் தவிர மற்றவை பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அவ்வளவு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் உள்ள மனிதர்களின் ‘தலைவிதி’யையோ, குணங்களையோ தீர்மானிக் கும் சக்தி கொண்டவை என நம்பு வதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் கிடையாது. வானத்தில் தொலைதூரத் தில் உள்ள ஒரு கிரகம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் (யீடிளவைiடிn) இருக்கும் காரணத் தால் அது பூமியில் உள்ள ஒரு தனிப் பட்ட மனிதரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை சோதிடர்களால் அறிவியல் பூர்வமாக விளக்க முடிவ தில்லை. சோதிட சாஸ்திரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அவர்களால் விளக்கமளிக்க முடி யாது.
பேராசிரியர் கே. ராஜு Thanks for Psf - Pondy (புதுவை அறிவியல் இயக்கம்)

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - செயல்பாடுகள் SALEM-TNSF

 

 

அன்பு நண்பர்களே,வணக்கம்.

             தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள உதாரணமாக எடுக்கப்பட்டுள்ள சேலம் அறிவியல் இயக்கத்தின் செயல்பாடு பற்றி கீழ்கண்டவாறு காணீர்!

Monday, May 28, 2012

சேலம் மாவட்ட செயற்குழுக் கூட்ட அறிக்கை


மூன்றாவது செயற்குழு கூட்ட அறிக்கை
1.அமைப்பு
வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரந்திரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
மாவட்ட அலுவலகம் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருமிகு.நமசிவாயம் அவர்களால் தன்னார்வத்துடன் நிர்வாகிக்கப்படுகிறது.
இரண்டாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம்
     இரண்டாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம் 2012 ஜனவரி 6 மற்றும் 7ந் தேதிகளில் சேலம் உருக்காலை சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. உணவு மற்றும் வேண்டிய அனைத்தும் ஏற்பாடுகளும் மோகன் நகர் கிளைத்தலைவர் திருமிகு சர்மா, கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்திரம், கிளைப் பொருளாளர் திருமிகு பத்மநாபன், கிளை உறுப்பினர்கள் திருமிகு பாலாஜி மாவட்ட உதவித் தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் திருமிகு T.ஜெயமுருகன் ஆகியோரால் சிறப்பாக செய்யபட்டது.
உபக்குழு நிகழ்ச்சிகளில் மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன், திருமிகு G.சுரேஷ், திருமிகு J. பாலசரவணன், திருமிகு S. அய்யணார், திருமிகு சஹிரா பேகம், திருமிகு K.சந்திரசேகர், திருமிகு விஜியலக்ஷ்மி, ஆத்தூர் கிளைத் தலைவர் திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர் திருமிகு சீனீவாசன் ஆகியார் கலந்து கொண்டனர்.
6ந்தேதி இரவு தொலைநோக்கி நிகழ்ச்சி திருமிகு T.ஜெயமுருகன் அவர்களால் நடத்தப்பட்டது.
6ந் தேதி மாலை கூடங்குளம் அணுமின் உலை மற்றும் முல்லை பெரியாறு அணை பற்றிய இரு கருத்தரங்குகள் நடைபெற்றது. மாவட்ட முழுவதும் இருந்து அறிவியல் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் திருமிகு P.சகஸ்ரநாமம் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்ட உணவு ஏற்பாடு ஊராட்சி தலைவர் திருமிகு……………. அவர்களால் செய்யபட்டது.
மூன்றாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம்
     மூன்றாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம் 2012 மே 19 மற்றும் 20ந் தேதிகளில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

4வது மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
      4வது நிர்வாககுழுக் கூட்டம் 09/02/2012 அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திருமிகு Dr. R. சாம்சன் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.  நிர்வாககுழு
உறுப்பினர்கள் மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன், திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு V.ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு M.கற்பகம், திருமிகு V.சீனிவாசன்  மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு S. அய்யணார், திருமிகு P.செங்கோடன், திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
5வது மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
      23/03/2012 அன்று திருமிகு N. கோபால் அவர்கள் இல்லத்தில் திருமிகு M.கற்பகம் தலைமயில் 5வது நிர்வாக்குழு கூட்டம் நடைபற்றது. நிர்வாககுழு உறுப்பினர்கள் திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு V.ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு M.கற்பகம், திருமிகு N. கோபால், திருமிகு ஏற்காடு இளங்கோ மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு R. K. லால், திருமிகு P.செங்கோடன், திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது மாவட்ட செயற்குழுக் கூட்டம்
      24/12/2011 அன்று இரண்டாவது மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்ட உதவித் தலவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில், தாரமங்கலத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சீனிவாசகரின் Nice Kids Collegeல் நடைபெற்றது. கிளைச் செயலாளர் திருமிகு ரமேஷ், திருமிகு சீனிவாசகர், திருமிகு விஸ்வநாதன், திருமிகு முரளிதரன், திருமிகு சந்தோஷ்குமார் ஆகியோர் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள். 16 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கிளை மற்றும் துளிர் இல்லம்
            28 துளிர் இல்லம் மாநிலத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. (தாரமங்கலத்தில்-15, தலைவாசல்-3, ஆத்தூர்-1, சேலம் உருக்காலை-1, நல்லண்ணம்பட்டியில்-3, கன்னந்தேரியில்-3, நெத்திமேடு-1, ஜாகிரம்மாபளையம்-1,) ஆத்தூர் ஜி.டி.நாயுடு துளிர் இல்லம் என மொத்தம் 29 துளிர் இல்லங்கள் உள்ளது.
      29/04/2012 அன்று குகை கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர்  திருமிகு G. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டார். 5 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்தெடுக்கபட்டது. தலைவராக திருமிகு ரேவதி அவர்களும், துணைத் தலைவராக திருமிகு செளடஸ்வரி அவர்களும், செயலாளராக திருமிகு கோகிலா அவர்களும், இணைச்செயலாளராக ராம்பிரசாத் அவர்களும், பொருளாராக திருமிகு தாரணி அவர்களும் தெர்தெடுக்கபட்டனர்.
     07/05/2012 அன்று குகை நிர்வாககுழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து திருமிகு G. சுரேஷ் மற்றும் திருமிகு அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டார்.
                            
2. அறிவியல் கல்வி பிரச்சாரம்
தேசிய அறிவியல் தினப்போட்டிகள்
     தேசிய அறிவியல் தினப்போட்டிகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கபட்டது. தேசிய அறிவியல் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள், அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, சொலவடை மற்றும் கதை போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அளவில் கட்டுரைப் போட்டியில் இள்மபிள்ளை ஜோதி வித்யாலாயா மெட்ரிக் பள்ளி மாணவ்ர் திருமிகு ஹரி முதலாம் இடமும், கதைப் போட்டியில் திருமிகு மாலதி அவர்கள் இரண்டாம் இடமும், சொலவடைப் போட்டியில் திருமிகு நிர்மலா முதல் இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய அறிவியல் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிளைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார் மற்றவர்களின் உதவியுடன் சிறப்பாக செய்திருந்தார். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ் வழங்கபட்டது.
      28/02/2012 அன்று அன்னபூர்ணி பொறியியல் க்ல்லூரியில் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாளாராக திருமிகு T.ஜெயமுருகன் அவர்களும், திருமிகு K.சந்திரசேகர் மற்றும் திருமிகு R. ஜெயகுமார் அவர்களும் கலந்து கொண்டனர். 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
துளிர் இல்லம்
       08/04/2012 அன்று செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதியில் 30 குழந்தைகளுக்கு திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் 3 மணி நேரம் பாடல், கதை, விளையாட்டு, அறிவியல் என அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தினர். குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள்.
       15,22,29/04/2012 மற்றும் 06/05/2015 ஆகிய நான்கு நாட்கள் செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதியில் 30 குழந்தைகளுக்கு திருமிகு G. சுரேஷ், திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு அறிவியல் நிகச்சிகளை நடத்தினார்கள்.
       13/05/2012 அன்று குகையில் சர்.சி.வி.ராமன் துளிர் இல்லத்தில் திருமிகு கலையரசன் அறிவியல் நிகச்சிகளை நடத்தினார். திருமிகு சண்முகசுந்திரம், குகை கிளைத் தலைவர் மற்றும் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளருமான திருமிகு ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
       15/05/2012 அன்று கன்னந்தேரியில் துளிர் இல்ல பயிற்சி மற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, 60 குழந்தைகள் கலந்து கொண்டனர். கருத்தாளாராக திருமிகு ம்ணிகண்டன் கலந்து கொண்டார்.
துளிர் இல்ல பயிற்சிமுகாம்
       10&11/03/2012 இரு நாட்கள் திருப்பூர் PEM Tech பள்ளியில் நடைபெற்ற மேற்கு மண்டல துளிர் இல்ல கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் சேலம் மாவட்டம் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     01/04/2012 அன்று துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட அளவில் தாரமங்கலத்தில் கிராம பெண்கள் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது. சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு ஏற்காடு இள்ங்கோ, திருமிகு கலையரசன் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன், மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு அமலராஜன் ஆகியோர் கருத்தாளர்களாக கலநது கொண்டு சிறப்பாக பயிற்சியளித்தனர்.
       14/04/2012 அன்று தலைவாசலில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கருத்தாளர்களாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு பழனி, திருமிகு ம்ணிகண்டன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருமிகு G. சுரேஷ், திருமிகு N. கோபால், ஆத்தூர் திருமிகு P. சீனிவாசன், தலைவாசல் திருமிகு V.சீனிவாசன், திருமிகு சத்தியமூர்த்தி, திருமிகு கணேசன், திருமிகு மகேந்திரன், திருமிகு சித்ரா, திருமிகு பாக்யராஜ் திருமிகு முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் நிகழ்ச்சி
      03/01/2012 அன்று ஆத்தூர் மலர் மெட்ரிக் பள்ளியிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அறிவியல் எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோ கலந்து கொண்ட அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர் 250 மாணவர்கள்.
                மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் 2012 ஜனவரி 5,6 மற்றும் 6ந் தேதிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அறிவியல் இயக்க கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
      16/01/2012 அன்று மேட்டூர் தாய் தமிழ் பள்ளியில் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர் 100 மாணவர்கள்.
      02/02/2012 அன்று உத்தமசோழபுரத்தில் DIET ல் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர் 150 மாணவர்கள்.
       13/04/2012 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமயில் நடைபெற்ற தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியில் திருமிகு தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா? தந்திரமா? மற்றும் திருமிகு G. சுரேஷ் அறிவியல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
             12/04/2012 அன்று மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நல்லண்ணம்பட்டி பள்ளியில் நடைபெற்றது.
       20/04/2012 அன்று மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி காடையாம்பட்டி, மாசிகவுண்டனூர் மற்றும் K.K. நகர் பள்ளிகளில் நடைபெற்றது.
3.கல்வி
புத்தக வாசிப்பு முகாம்
26/01/2012 அன்று மாலை 6 மணிக்கு திருமிகு R.பவளவள்ளி அவர்கள் வீட்டில் புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் ஆளுக்கொறு கிணறுதிருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு R.சசிகலா திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு கோபால், திருமிகு S. அய்யணார், திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
26/01/2012 அன்று மாலை 6 மணிக்கு திருமிகு R. சசிகலா அவர்கள் வீட்டில் புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் வினயா”. திருமிகு R., சசிகலா, திருமிகு R.பவளவள்ளி, திருமிகு G. சுரேஷ், திருமிகு ஐடா பிரிசில்லா, திருமிகு நமச்சிவாயம், திருமிகு குரு அறுமுகம், திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
28/04/2012 அன்று நல்லண்ணம்பட்டியில் 3 துளிர் இல்ல குழந்தகளுக்கான புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் “சார்லஸ் டார்வின்”.  30  புத்தகங்களை நல்லண்ணம்பட்டி பள்ளி தலைமயாசிரும் மாவட்ட பொதுகுழு உறுப்பினருமான திருமிகு P.செங்கோடன் துளிர் இல்ல குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து புத்தக வாசிப்பு முகாம் நடத்தினார். கருத்தாளராக திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார்.
சக்சார் பாரத் திட்டம்
01/01/2012 அன்று மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மாநிலச் செயலாளர் திருமிகு S சுப்ரமணி, திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு K.சந்திரசேகர் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண் எழுத்தறிவு 50%க்கு குறைவாக உள்ள மாநிலங்களில் BGVS மற்றும் NHR இணைந்து நடத்தும் சக்சார் பாரத்என்னும் அகில இந்திய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென் மாநிலங்களில் கலைபயணம் நடைபெற்றது  ஒரு கலைகுழு ஈரோட்டிலிருந்து எடப்பாடி, சேலம், தர்மபுரி, ஆத்தூர் ஆகிய மூன்று இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு விழுப்புரம் சென்றது. இந்நிகழ்வையொட்டி நடைபெறும் “எனது கனவுகளில் எனது கிராமம்என்னும் தலைப்பில் மக்கள் கருத்துதாள் எழுதி வாங்குவது, விவாதங்கள் நடத்தி அதை தொகுப்பது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.சந்திரசேகர் சிறப்பாக ஒருங்கிணைத்து நட்த்தினார்.
கிராமக் கல்வி குழு பயிற்சி முகாம்
      27,28 மற்றும் 29ந் தேதிகளில் சென்னையில் நடந்த மாநில அளவிலான கிராமக் கல்வி குழு பயிற்சி முகாமில் திருமிகு J.பாலசரவணன் கலந்து கொண்டார்.
      30,31/01/2012ல் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் ஆத்தூர் கிளைத் தலைவர் திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர் திருமிகு சீனீவாசன், திருமிகு கற்பகம், திருமிகு தமிழய்யன் ஆகியோர் நமது இயக்கத்தின் சார்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
                கிராம கல்வி குழு பயிற்சிகளில் கருத்தாளர்களாக கன்னந்தேரியில் திருமிகு K.சந்திரசேகர்,  நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், அரிசிபாளையத்தில் திருமிகு M.கற்பகம், திருமிகு A.அர்த்தநாரி, திருமிகு P. சீனிவாசன், திருமிகு தமிழய்யன், திருமிகு சாமிநாதன், திருமிகு V.சீனிவாசன், திருமிகு சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி
      கொண்டப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட பயிற்சிக்கு திருமிகு M.கற்பகம், திருமிகு சஹிரா பேகம், திருமிகு சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
      வாழப்பாடி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் இரு இடங்களில் கருத்தாளராக திருமிகு N. கோபால் கலந்து கொண்டார். அதில் வேப்பிலைபட்டியில் 150 உறுப்பினர்களும், வாழப்பாடியில் 40 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
      கன்ன்ங்குறிச்சி, கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் சொர்ணபுரி பகுதியில் கருத்தாளராக திருமிகு சஹிரா பேகம் கல்நது கொண்டார்.
      தாரமங்கலத்தில் திருமிகு செங்கோட்டுவேல், திருமிகு ரமேஷ், மேட்டூரில் திருமிகு இமயபாலன், திருமிகு சுப்ரமணி, ஆத்தூரில் திருமிகு A.அர்த்தநாரி, திருமிகு P. சீனிவாசன், காக்காபாளையத்தில் திருமிகு இமயபாலன், நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், திருமிகு G. சுரேஷ், கன்னந்தேரியில் திருமிகு K.சந்திரசேகர் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சியளித்தனர். மேற்கண்ட பயிற்சிகள் 2012 மார்ச் 19,20 & 21 தேதிகளில் நடைபெற்றது.

4.அறிவியல் வெளியீடு
     30/12/2012 அன்று புத்தக இருப்பு எடுக்கபட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன், திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யணார், திருமிகு நமச்சிவாயம் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் புத்தக இருப்பு எடுப்பதில் பங்கேற்றனர்.
மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் மற்றும் தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் திருமிகு. சந்தோஷ், திருமிகு ரமேஷ், திருமிகு கார்த்திக், திருமிகு ஸ்ரீனிவாசகர் திருமிகு செங்கோட்டுவெல் மற்றும் திருமிகு ராஜேந்திரசோழன்  உதவி.பேராசிரியர் . சுதா, மேட்டுர் கோவிந்தராஜன், ஆகியோர் துளிர் முகவர்களாக மாவட்டத்தில் மொத்தம் 225 துளிர் மற்றும் 10 ஜந்தர் மந்தர்  விற்பனை செய்கின்றனர்.
மாதந்தோறும் 30 அறிவுதென்றல் வாங்கபடுகிறது.
பாரதி புத்தகலாய புத்தகங்கள் பாலம் புத்தக மையம் மூலம் சுமார் ரூ 10,000 மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது பணம் செலுத்தப்பட வேண்டும்.
திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்களிடம் இருந்து ரூ 5700 க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டு முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
உறுப்பினர் ஆயுள் சந்தா 7, உறுப்பினர் ஆண்டு சந்தா 632,  துளிர் ஆண்டு சந்தா 88, துளிர் ஆயுள் சந்தா 1,  மற்றும் ஜந்தர் மந்தர் ஆண்டு சந்தா 11, விழுது சந்தா - 0, சேகரிக்கப்பட்டுள்ளது.
     
புத்தக விற்பனை
ஜனவரி 5 பட்டு வளர்ச்சி துறை நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.542, துணிப்பை ரூ720)
சீலநாய்க்கன்பட்டியில் வருமானவரி ஊழியர் சங்க மாநில மாநாட்டு 2012 ஜனவரி 6,7ந் தேதிகளில் நடைபெற்றது. திருமிகு நேதாஜி அவர்கள் உதவியுடன் திருமிகு நமச்சிவாயம் அவர்கள் விற்பனை செய்யபட்டது. (ரூ3011)
சேலம் உருக்காலையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1655) 
      26/01/2012 அன்று சேலம் தெய்வீக திருமண மண்டபத்தில் LIC லைவிழா நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.3068). விற்பனையில் திருமிகு N. கோபால், திருமிகு நேதாஜி, திருமிகு R.பவளவள்ளி ஆகியோர் பங்க் பெற்றனர்.
      02/02/2012 அன்று உத்தமசோழபுரத்தில் DIET ல் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.2615).
      10/02/2012 அன்று கன்னந்தேரியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1137).
      28/02/2012 அன்று அன்ன்பூர்ணி பொறியியல் க்ல்லூரியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.986).
      01/04/2012 அன்று தாரமங்கலம் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.440).
      12/04/2012 அன்று நல்லண்ணம்பட்டி பள்ளியில் நடைபெற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.255).
       14/04/2012 அன்று தலைவாசலில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.280).
16/04/2012 அன்று நல்லண்னம் பட்டி துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.280).
      22/04/2012 அன்று சாலைப் பணியாளர்கள் சங்க மாநாட்டில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.300).
      28/04/2012- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கலை இரவு நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1645).
19/05/2012 அன்று குஜராத்தி திருமண மண்டபத்தில் வணிகர் சங்க நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் மற்றும்& கற்பகம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1935).

5.சமம்
       சமம் மாநில உபக்குழு சார்பாக மதுரை மூட்டா அலுவலகத்தில் 25,26/02/2012 நடைபெற்ற கூட்டத்தில் சேலத்தின் சார்பாக சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு M.கற்பகம் அவர்கள் கல்ந்து கொண்டார்கள்.
சர்வதேச மகளிர் தினப்போட்டிகள்
             சர்வதேச மகளிர் தினப்போட்டிகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கபட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள், அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, மற்றும் கதை போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிளைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் மற்றவர்களின் உதவியுடன் சிறப்பாக செய்திருந்தார். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ் வழங்கபட்டது.

6.வளர்ச்சி
7.இதர
நிகழ்ச்சிகள்
       தலைவாசலில் நடைபெற்ற தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவில் திருமிகு N. கோபால் அவர்கள் கலந்து கொண்டு தலவாசல் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவியல் வெளியீடு புத்தகங்களை பரிசளித்தார்.
தானே புயல்
       தானே புயல் நிவாரணநிதி ரூ 11,200 வசூல் செய்யபட்டு கடலூர் மாவட்டச் செயலாளர் திருமிகு ரஜினி அவர்களிடம் அளிக்கப்பட்டது.
       மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன் அவர்கள் முதலவராக இருக்கும் மகேந்திரா பொறியியல் கல்லூரி நிர்வாகம் மூலம் சுமார் ரூ. 2,00,000க்கு மேல் மதிப்புள்ள போர்வை மற்றும் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களை கடலூர் மாவட்ட மக்களுக்கு அளித்து உத்வினார்கள்.

       சென்னையிலிருந்து தொலைநோக்கி வாங்கபட்டுள்ளது. திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு தினேஷ் இருவரும் சென்னை சென்று தொலைநோக்கி பயிற்சி எடுத்து கொண்டு தொலைநோக்கியை வாங்கி வந்தனர்.  
சமச்சீர் கல்வி வழக்கு நிதி
       சமச்சீர் கல்விக்கான பிரின்ஸ் கஜேந்திரபாபு நடத்திய வழக்குக்கு நிதி மாநில செயற்குழுவில் கேட்டு கொண்டதற்கிணங்க ரூ 11200 வசூல் செய்யபட்டு, மாநில மையத்திடம் தரப்பட்டது.



அன்புடன்

வெ.ராமமூர்த்தி - 94864 86755
மாவட்ட செயலாளர்,
சேலம் மாவட்டம்.