14 டிசம்பர், 2011

ராஜ நாகம்.-01


அன்பு நண்பர்களே,வணக்கம். 

இந்தப்பதிவில் மரியாதைக்குரிய அம்மையார் பேரா.மோகனா அவர்களது பதிவு காணீர்.

 

Dec 14, 2011

ராஜ நாகம்.


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது 100 %உண்மைதான்   நண்பா! . உங்களுக்குத் தெரியுமா, பாம்புகள் உலகின் காலில்லாத பல்லிகள். அவ்வளவே. ! சில பாம்புக்கள்   விடம் உள்ளவை. இவைகளுக்கு கண் இமையும், வெளிக்காதும் கூட  கிடையாது,வெளி வெப்ப நிலைக்குத் தகுந்தாற்  போல தன உடல் வெப்பத்தை வைத்திருப்பவை இவைகளுக்கு தாடையில் எலும்பு கிடையாது. எனவே எவ்வளவு பெரிய உணவானாலும் விழுங்க முடியும்.இன்னொரு முக்கியான விஷயம். நமக்கு ஜோடி ஜோடியாக உள்ள அனைத்து உறுப்புகளும் இவைகளுக்கு ஒத்தையாகவே உள்ளன. முதன்மையாக ஒரே  ஒரு நுரையிரல் மட்டுமே உண்டு.அன்டார்டிகாவிலும், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் நியுசிலாந்து தவிர, உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்றன .    
    .   உலகில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன? பாம்பில் 15 குடும்பங்களும்  2 ,900  ௦௦இனங்களும் உள்ளன. இவற்றில் 10 செ.மீ உள்ள நூல் பாம்பிலிருந்து, 7 .9 மீ நீளமுள்ள அனகோண்டா வரை உண்டு. இதுவரை உலகில் வாழ்ந்த பாம்புகளில் மிகப் பெரியது.58 -60 மில்லியன்ஆண்டுகளுக்கு  முன்  வாழ்ந்த டைடானிக் போயா தான். இதன் நீளம்12-15 மீ ஒரு மீட்டர்.  விட்டம்1 மீ. , .எடை, 1385 கிலோ. 
    உலகிலுள்ள பாம்பு இனங்களில் ஒரே ஒரு பாம்பு மட்டும் பறவை போல கூடு கட்டும் .அதில் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அதுதான் ராஜ நாகம். இதன் நீளம் 5 .5 மீ.ராஜ நாகத்திலே  200 இனங்கள் உள்ளன. இவை மற்ற நாகப் பாம்புகளை விட புத்திசாலித்தனம் நிறைந்தவை. இவை இணை சேரும் சமயத்தில், இணையைக் கண்டு பிடிப்பதற்காகவே, ஒருவித வாசனையை காற்றில் கலக்க விடும். ஆண் பெண் இரு பாம்புகளுமே, புனுகு வாசனையை வெளிவிடும். கிராமத்தில் , நாகப் பாம்பு இருந்தால்,உளுந்து வாசனை அடிக்கும் என்று சொல்வார்கள். அது இதுதானோ.!
   இணை சேர்ந்த 2 மாதம் கழித்து, ராணி நாகம் முட்டை இடும்.பின் இரண்டு மாதம் சென்ற பின் அவை பொரிக்கும். முட்டையை ராணி நாகம் இலை, செத்தை,மரக்  குப்பைகள் போட்டு கூடு கட்டும், அடை காக்கும். தந்தை முட்டையையும் அம்மாவையும் காவல் காக்கும்.  இது20 ௦-40 முட்டைகள் இடும்ஆண் அடை காக்கும் பெண் பாம்பையும் முட்டையையும் சேர்த்து பாதுகாக்கும் . பெண் பாம்புதான் ஆண் பாம்புடன் சேர்ந்து  முட்டையை தரையில் அடை   காக்கும். அடைகாக்கும் காலம்  60-90 நாட்கள் .  முட்டையிலிருந்து  வெளிவரும்  குஞ்சுகள்   50 செ.மீ நீளத்தில் இருக்கும். முட்டையிலிருந்து குழந்தை ராஜநாகம் வெளி வந்ததும் ராணி விலகிப் போய் தன பணிகளை பார்க்க போய்விடும். குட்டிகள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.அதனுடைய விடமும் கூட முதிர்ந்த பாம்பின் நஞ்சு போலவே வீரியம் மிக்கது
         நாகப்பாம்புக்கு நன்றாக கண் தெரியும் , இரவிலும் கூட. !ராஜநாகத்தின் கண் பார்வை மற்ற பாம்புகளைவிட கூர்மையானது.தன் எதிரில் உள்ள பொருளை 330 அடி தூரத்திலேயே நன்றாக கவனித்து விடும்  ராஜ நாகம் மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்ளும்.பாம்புகள் கிடைக்காவிட்டால் இவை, ஓணான், பறவைகள், அணில் போன்றவற்றையும் உண்ணும்.  பாம்புகள் மிக மெலிதான வெப்ப மாறு பாட்டைக்   கூட உணரும் தன்மை பெற்றவை. இதற்காகத்தான் அது அடிக்கடி நாக்கை வெளியில் நீட்டு கிறது.குட்டியூண்டு உறுப்பான ஜகோப்சன் உறுப்பு இதன் மேல் தாடையில் உள்ளது. அதன் மூலம் இது வெப்பத்தை உணருகிறது. மற்ற பாம்புகள் போலவே, இதுவும் பிளவுபட்ட  நாக்கின் மூலம் இரையின் வாசனை உணர்ந்து அது  இருக்கும் திசையையும் அறிகிறது. இந்த பிளவுபட்ட நாக்கு ஸ்டீரியோ போல செயல்படுகிறது.மேலும், இதன் உதவியால்தான் பாம்பு இரவிலும் தன் இரையைப் பிடிக்கிறது.ராஜ நாகம் மற்ற பாம்புகள் போல் இரையை அரைத்து உண்ணாது. அப்படியே முழுங்கிவிடும். 
       ராஜநாகம் மூர்க்க குணம் உள்ளது. நாகப்பாம்பின் நஞ்சுநேரடியாக  நரம்பு மண்டலத்தைத்தான் தாக்கும்.அனைத்து பாம்புகளின் நஞ்சும் புரதம் தான். ராஜ நாகம் கடித்ததும், அந்த கடி சுமார் 1 .5 செ.மீ ஆழமான காயத்தை நம் உடம்பில் உண்டுபண்ணும்.விடம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். உடனே கடுமையான வலி ஏற்படும். அதைத் தொடர்ந்து கண் பார்வை குறைந்து, தலை சுற்றி, உடனடியாக பக்கவாதம் உண்டாகும்.இதய இரத்த குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். பிறகு மூச்சு திணறலால் இறப்பு நிகழும்.  ராஜ நாகத்தின்  நஞ்சு மிகவும் வீரியமுள்ளது அல்ல. ஆனால் ஒரே கொத்துதான் அதிலேயே ஒரு யானை கூட வீழ்ந்து , இறந்தும் போகும். அந்த  அளவுக்கானஅதிக நஞ்சை ஒரு போடு
போடும்போதே, செலுத்தி விடும் .ஒரு கடியில் சுமார் 7 மி.லி விடத்தை செலுத்தும்.ஒரு முறை கொத்தும்போது 20 பேரை கொல்லும் அளவுக்கு   அதில்  நஞ்சு உள்ளதாம்.  அதில் இருக்கிறது.பொதுவாக ராஜ நாகம்   கடித்தால் ஒருவர் அதிகபட்சம்  15 நிமிடத்துக்குள் இறந்து விடுவார்பெரும்பாலும் ராஜ நாகம் கடித்தால் 80 % இறப்புதான். உடனடியாக பாம்பின் எதிர் நஞ்சு செலுத்தினால் , சிகிச்சைக்குத் தகுந்தாற்போல் காப்பாற்றப்பட  வாய்ப்பு உண்டு..இதுவரை ராஜ நாகம் கடித்து ஒருவர் தான் பிழைத்துள்ளார். அவரும் இதனை பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, கடித்ததால், உடனே பாம்பின் எதிர் நஞ்சு ஒரு நிமிடத்திற்குள் செலுத்தப் பட்டதால் , காப்பாற்றப் பட்டார். 
           பொதுவாக நாகப் பாம்பு மற்றவர்கள் எதிரில் வரவே வெட்கப்படும். மனிதர்களைக் கண்டால் ஓடிப்போய் புதர், மரம், மறைவான இடத்திற்குப் போய் ஒளிந்து கொல்லும். ஆனால் ராஜநாகம்   மனிதர்களை   எதிர்த்து நின்று தரையி லிருந்து   சுமார் 6 அடி உயரம்       எழும்பி படமெடுக்கும். பாம்புகள் புத்திசாலித்தனம் நிறைந்தவை. ஆபத்தான பகுதியை தவிர்த்து விடும்.,ராஜநாகம் இந்தியா , மலேசியா ,தென்சீனா, வியட் நாம் போன்ற தெற்கு ஆசியப் பகுதிகளிலும்வடக்கு ஆப்பிரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும்  காணப் படுகிறது. 

ராஜ நாகத்தின் சீறும் சத்தம், நாய் உறுமும் சத்தம் போலவே கேட்கும்.பாம்பின் உடல் வளர்ந்தவுடன்ராஜநாகம் வருடத்தில் 4 -6 முறை தன் தோலை உறிக்கும். ஆனால் குட்டி பாம்புகள் மாதம் ஒரு முறை தோல் உறிக்கும்.தோல் உறிக்கும் காலகட்டத்தில், பாம்பு தான் பழைய தோலை உறிப்பதற்காக   ஏராளமாய் தண்ணீர் குடிக்கும்.ராஜநாகம் மற்ற பாம்புகளைவிட ரொம்பவும் சாதுரியமனவை. ராஜநாகம் பொதுவாக, தான் சுற்றிவளைக்கப் பட்டாலும் கூட , தப்பித்து ஓடவே முயற்சி பண்ணும்.  , தப்பிக்க வழியில்லை என்றால்,அல்லது முட்டைகள் தாக்குதலுக்கு உட்பட்டால் மட்டுமே தாக்கும்/கொத்தும். இது ராஜநாகத்துக்கு மட்டுமல்ல எல்லா பாம்புகளுக்கும் பொருந்தும். எந்த பாம்பும் பொதுவாக மனிதர்களை/ விலங்குகளை தேடித் போய் தாக்குவதில்லை. தான் தாக்கப்படும்./ பாதிக்கக்கபடும் நிலை ஏற்பட்டாலேயே, பிறர் மேல் தாக்குதல் நிகழ்த்துகின்றன. பாம்பின் விடம் என்பது தன் இரையை, உணர்விழக்கச் செய்வதற்காக, இயற்கை அளித்த சொத்து.    ராஜ நாகத்தின் இயற்கை எதிரி கீரிதான். இதற்கு பாம்பின், நரம்புநஞ்சை முறிக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது.  பொதுவாக ராஜ நாகம்  காடுகளில்தான்   வாழுகின்றன  . நீர்நிலைகளில்  நிரந்தர   வெப்பம்     உள்ள    இடத்தில்  வாழும் . இவைகளின்  வாழிடம்  பாதிப்பு  உள்ளாவதாலேயே   , இவை ஊருக்குள்  வருகின்றன .  .  
 பேரா.மோகனா


நறுமணப்.. பொருள்களின் ..ராஜா













அன்புள்ள நண்பர்களே.
வணக்கம். ஒரு காலத்தில் மிளகு பண்டமாற்று பொருளாகவும். பணம்மகவும் பயன்பட்டதாம். அந்த கதையைக் கேட்கிறீர்களா? .

கொல்லிமலையில் மிளகு கொடி
 நண்பா நீங்கள் சைவமா, அசைவமா?எதுவாக இருந்தாலும் சரி..,!தமிழ்நாட்டுக்காரர் என்றால், தினம் சாப்பாட்டில், கட்டாயம் ரசம் உண்டு . திருமணத்தில் எப்படி பெண் அவசியமோ ,அதுபோல ரசத்தில் நிச்சயம் மிளகு உண்டு. மிளகில்லாத ரசமா?அதிலும் மிளகு ரசம் என்ற சிறப்பு ரசமும் கூட இருக்கிறதே..!அப்படி,மருத்துவ குணம் வாய்ந்த மிளகை தினமும் நாம் பயன்படுத்துகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கும்,சீரணத்துக்கும் மிளகு பெரிதும் உதவுகிறது.அது மட்டுமல்ல இந்த சிவப்பு மிளகாய் மெக்சிகோ நாட்டிலிருந்து நமக்கு இறக்குமதியான பொருள். இதன் பிறப்பிடம் அமெரிக்கா.

  மிளகு..! நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் மிளகு. நம் சமையலில் மட்டுமல்ல,இன்று உலகம் முழுவதும், காரத்துக்கும்,மணத்துக்கும், சுவைக்கும் மிளகு பயன்படுத்தப் படுகின்றது.மிளகின் தாயகம் கேரளத்துமண்தான். ஆனால் அதிகம் மிளகைப்பயன்படுத்துவது அமெரிக்கர்கள்தான். நறுமணப் பொருள் வாணிகத்தில், மிகவும் தொன்மையான பொருட்களில் ஒன்றுதான்மிளகு .நறுமணப் பொருள்களின் ராஜா மிளகு தான் சதையால் மூடப்பட்ட கனி என்ற பொருள் கொண்ட சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானதுதான். இதன் சரித்திரம் மிக நீண்டது. சுமார் 5 ,000ஆண்டுகளுக்கு முன்பு ,இஞ்சியுடன் சேர்த்து, மிளகும் தெற்கு ஆசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாம்.கருப்பு குறு மிளகு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களும், வணிக சந்தைகளும் தென்மேற்கு இந்தியாவிலேதான் இருந்தன. கருப்பு மிளகு வாணிக சந்தையில்,மதிப்பு மிக்க பொருளாக, கறுப்புத் தங்கமாகவே கருதப்பட்டது.மிளகு, மக்கள் பயன்படுத்தும் பணமாகவும், பண்டமாற்றுப் பொருளாகவும்,உபயோகப்பட்டது.

உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே, 25 % ,ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது இன்று உலகில் அதிகமாக மிளகு இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்க. அதே போல உலகின் அதிகமாக மிளகை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான்.இன்று புதிதாக மிளகு ஏற்றுமதியில் களத்தில் இறங்கியிருக்கும் நாடு பிரேசில்.இந்தியாவின் புராதன இதிகாசமான மகாபாரதத்தில், மிளகு போட்டு கறி விருந்து சமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதா என்ற மருத்துவ ஆவணத்தில் , மிளகு மதிப்பு வாய்ந்த பாரம்பரிய மருந்தாக கூறப்படுகிறது.ரோமானியர்கள்காரம் மிகுந்த மிளகை மிகவும் மதித்தனர். ஐரோப்பாவில் பேரரசர் மார்கஸ் அரேலியஸ்,அலேசாண்டிரியாவுக்கு வந்த வெள்ளை மிளகுக்கு, வணிக வரி விதித்தாராம். ஆனால் கருப்பு மிளகை விதிவிலக்காக விட்டுவிட்டாராம். ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும்,ஐரோப்பியர்கள் மிளகை மிகவும் மரியாதையுடன் நடத்தினர். மிளகு சமையலில் முக்கிய வாசனை மற்றும் காரத்திற்கு மட்டும் பயன்படாமல்,உணவை பதப்படுத்தவும் இது பயன்பட்டது.மிளகு விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டதால் இதனை பணமாகவும், வரதட்சிணைப் பொருளாகவும் வரி கொடுக்கவும் , வாடகை கொடுக்கவும்,பயன் படுத்தினர்.இன்றும் கூட இது மிளகு வாடகை என்று சொல்லப்படுகிறது . .
மிளகு, பூத்து காய் த்து படர்ந்து வளரும் கொடிஇது மிளகு பூக்கும் கொடி வகையில் பெப்பர்சினியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பழத்துக்காகவே இது வளர்க்கப் படுகிறது.நறுமணப் பொருளாகவும், உணவுக்கு சுவையூட்டும் பொருளாகவும், பயன்படுகிறது.பொதுவாக 4 மீ உயர மரத்திலோ,குச்சியிலோ கம்பிலோ படர்ந்து,ஆதாரத்துடன் வளரும்...இதன் இலைகள் வெற்றிலை இலைபோல 5 -10௦ செ. மீ நீளத்தில் இருக்கும் இதன் பழத்தில் ஒரேஒரு விதை தான் இருக்கும். பழம் சிவப்பாகவும், உலர்ந்தபின் கருப்பாகவும் காணப்படும்மிளகு அதன் பொடி போன்றவை பொதுவாக கருப்பாகவே இருக்கும். இதனை கருப்பு மிளகு என்கின்றனர். இதைத தவிர,பச்சைமிளகு, வெள்ளை மிளகு, சிவப்பு மிளகு,பழுப்பு மிளகு போன்றவையும் உண்டு. பச்சை மற்றும் சிவப்பு மிளகு போன்றவை வேறு செடியிலிருந்து கிடைக்கின்றன இவை கடல் மட்டத்திலிருந்து 3 ,000 அடி உயரத்திற்கு மேல் வளராது.மிளகு கொடிலநடுக்கோட்நிலநடுக்கோட்டிலிருந்து 15 டிகிரி அட்ச ரேகைப் பகுதிகளில் மட்டுமே மிளகு வளரும்.உலகின் அதிகமான மிளகு ஏற்றுமதியாளர் இந்தியா மட்டுமே உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே, 25 % ,ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது

  மிளகு கேரளாவிலிருந்து கிடைத்தாலும், மலபார் கடற்கரையை ஒட்டி விளைவது, மலபார் மிளகு என்றும். தெல்லிச்சேரியிலிருந்து விளைவது தெல்லிச்சேரி மிளகு என்றும் சொல்லப்படுகிறது. இதில் தெல்லிச்சேரி மிளகுதான் தரத்தில் உயர்ந்தது.பண்டை காலங்களில் எகிப்து மற்றும் ரோம் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மிளகு, அரேபியர் மூலமாக ரகசிய வழிகளில் வந்து சேர்ந்தது.பின்னர் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் இதன் மூல இடத்தை அறிந்தனர். இந்த மதிப்பு மிக்க நறுமணப் பொருளுக்கான போட்டி என்பது,கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகம் தேடி,அதனை கண்டுபிடிக்கும் வரை.சுமார் 2000 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அங்கு மிளகு இல்லை என்றதும் கதை சப்பென்று ஆகிவிட்டது.

மத்திய காலங்களில் போர்த்துகீசும், பின்னர் டச்சும் மிளகின் வாணிபத்தை ஏகபோக முதலாளியாகவே நடத்தினர் அப்போது மிளகுஎடையிலும் கூட, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததாக கருதப் பட்டது. மேலும் அதுவே உடனடி பணமாகவும் பயன்பட்டது.ஒரு மிளகைக் கூட பணமாக பயன்படுத்தினர் என்றால், அதற்கு இருந்த மதிப்பை, மரியாதையை கற்பனை செய்து பாருங்கள்.அதுலுள்ள மிக்கியமான அம்சம் என்றவென்றால், மிகை வாணிபத்தின் பொது கையாளும் தொழிலாளிகள்,அதனை கையாளும்போது, பை வைத்த சட்டையோ, கையை மடித்து அழகு படுத்துவதோ கூடாது . ஏன் தெரியுமா.அங்கே, மிளகை மறைத்து வைத்து, கொண்டுபோய் விடுவார்கள் என்ற பயம்தான்.

. மத்திய காலங்களில், கெட்டுப்போன மாமிசத்தை மறைக்கவும் , நல்ல சுவையை நாக்குக்கு தரவும், மிளகை கேட்டு வாங்கி பயன்படுத்தினர். மத்திய காலங்களில் வசதி படைத்த பணக்காரர்கள் மட்டுமே பயன் படுத்தும் பொருளாகவே மிளகு இருந்தது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான் அதிக அளவு மிளகு உண்பவர்கள்.அதில் கார நெடியின் காரணி, அதன் நடுவிலுள்ள காப்சாய்சின் என்ற வேதிப் பொருளே. அது இதய நோய்களை கட்டுப் படுத்து கிறது: இரத்தக் குழாய்களை தூண்டிவிடுகிறது.கொழுப்பையும், மிகை இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.இரத்தக் குழாய்கள் கடினமாவதையும், இரத்தத்தை கட்டியையும் குறைக்கிறது.உடலின் செல்களை பாதுகாத்து,வயதாவதைக் குறைக்கிறது. சீரணத்தை கட்டுப் படுத்துகிறது. வாயுத் தொல்லை மற்றும் வயிற்று பொருமலை குறைக்கிறது

மிக்க நன்றி.
என்றும் அன்புடன்,
மோகனா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக