17 டிசம்பர், 2011

DIVINE ROAD SAFETY COMMITTEE


அன்பு நண்பர்களே,வணக்கம்.
         மனித சமூகத்திற்கு மிக அச்சுறுத்தலாக ,விளங்கும் சாலை விபத்து அதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு தாளவாடியில் டிவைன் மெட்ரிக் பள்ளியில்'' DIVINE ROAD SAFETY COMMITTEE ''-THALAVADY சார்பாக 17-12-2011சனிக்கிழமை அன்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதாவது
       ''12-12-2011ஞாயிறு அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடிகிளையின் கோரிக்கை'' யின் பேரில் அமைக்கப்பட்ட ''டிவைன் சாலை பாதுகாப்புக்கமிட்டி''யின் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.






       இந்த ''DIVINE ROAD SAFETY COMMITTEE '' கூட்டத்தில் டிவைன் மெட்ரிக் பள்ளி நிர்வாகி மதிப்பிற்குரிய ''ஐயா'' அவர்களது தலைமையில்  டிவைன் சாலைபாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களான பெற்றோர் சங்கம்,மாணவர் அமைப்பு,ஆசிரியர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி கிளை ஆகியன கலந்து கொண்டன.

        வருகிற ஜனவரி2012 அன்று 5-ந்தேதி தாளவாடியில் காவல்துறை அனுமதியின் பேரில் ROTARY CLUB-THALAVADY மற்றும் TAMILNADU SCIENCE FORUM-THALAVADY ஆகிய சமூக அமைப்புகளுடன் இணைந்து தாளவாடி வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை இணைத்து சாலை பாதுகாப்பு பேரணி நடத்துவது என்றும் 
       அன்று வட்டார வள மையத்தின் முன்பு உள்ள மைதானத்தில் கருத்தரங்கு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
      அதற்கு முன்பாக
        ''விபத்து ஏன் ஏற்படுகிறது? விபத்தை தடுக்க என்ன செய்யலாம்?'' 
         என்ற தலைப்பில் விருப்பமுள்ள அனைத்து பள்ளி மற்றும் சமூக ஆர்வலர்கள்,ஆசிரிய,ஆசிரியைகள் இன்னும் பிற துறைகளைச் சார்ந்த அனைவரிடமும் கட்டுரைப்போட்டி நடத்துவது என்றும் அதனுடன் கருத்துப்பதிவுகள் அவசியம் பெற்று ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பிவைப்பது அல்லது பொதுமக்களிடையே விளம்பரம் செய்து விபத்துக்களைத்தடுக்க முயற்சி செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
         அன்றைய தினம் பள்ளி வளாகத்தில் மூலிகைப்பண்ணை அமைப்பது என்றும் அன்று முதல் மூலிகைத்தாவரங்களை சேகரிப்பதோடு நில்லாமல் அனைத்து மாணவர்,மாணவியர்களிடையே மூலிகைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி ஆர்வத்தை ஊட்டவும் முடிவு செய்யப்பட்டது.
       TAMILNADU SCIENCE FORUM THALAVADY-ERODE DISTRICT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக