17 டிசம்பர், 2011

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ள‍து. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கு கிறது.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப் பட வில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பய னாய், தமிழ்நாட்டில் ஆண்டுக ளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.
இதன் தனிச்சிறப்பு
ஒன்றே முகால் அடி அல்ல‍து ஏழே வார்த்தைகள் கொண்டு, பொருள் விளக்கும் ஒப்ப‍ற்ற‍ காவியமா கும். திருக்குறளால் தமிழுக்கு கிடைத்த‍ பெருமைகளை வார்த்தை களால் வரையறுக்க‍ முடியா தது.
அத்தகைய சிறப்பு மிக்க‍ திருக்குறளில் உள்ள‍ எத்தனை குறள்கள் நம்மில் எத் த‍னைப் பேருக்கு நினைவிருக்கும் என்று கேட்டால் நம்மில் ப‌லருககு திருக்குறள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களு க்காகவே இந்த தளம் உள்ள‍து. ஆம் திரு க்குறளில் உள்ள‍ முதல் அல்ல‍து கடைசி வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய் தால் பக்க‍த்தில் உள்ள‍ பெட்டியில் தானா கவே தமிழில் மாறும் பின் அதறகு அரு கில் உள்ள‍ தேடுக என்ற பொத்தானை அழுத்தினால் தாங்கள் தேடும் திருக்குறள் தோன்றும்,
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தளத்தி னை பயன்படுத்தி, திருக் குறள் அறிவோம், குறள் வழி நடப்போம். நண்பர்களே!
திருக்குறள் (இந்த வார்த்தையை கிளிக் செய்க•)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக