20 ஏப்ரல், 2012

புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை-தாளவாடி2012

புத்தகம் விற்பனை என்பது வியாபாரம் அல்ல! அதுவும் சமூக சேவையே!!
     
  அன்பு நண்பர்களே,
     வணக்கம்.  உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்-அனுசரிப்பு தினமான 23-04-2012 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை ஈரோடு மாவட்டம் சார்பாக -தாளவாடி பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டமும்,விழிப்புணர்வுப் பேரணியும், நல்ல புத்தகங்கள் கண்காட்சி & விற்பனையும் நடத்தப்படுகிறது.   புத்தகங்களும் இன்று சென்னையில் இருந்து KPN PARCEL SERVICE -ல் சத்தியமங்கலம் அனுப்பிவிட்டதாக  சென்னை DM.KPNSPS/அலைபேசி வழித்தகவல் .அதில் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன.என்ற விபரங்களை பரிசோதித்து அவசியம் இங்கு பதிவிடப்படும்.புத்தக கண்காட்சி இனி வருடந்தோறும் தாளவாடியில் நடைபெறும்.அருமை நண்பர் A.P.ராஜூ அவர்கள் ஆதரவு உள்ளவரை. இதே கண்காட்சி சத்தியமங்கலம் மற்றும் கோபியிலும் போட ஆதரவு திரட்டி வருகிறார்கள் திரு. C.பரமேஸ்வரன்- அரசுப்பேருந்து டிரைவர் மற்றும் திரு. A.P.ராஜூ -அரசுப்பேருந்து நடத்துனர் அவர்களும். புத்தகம் விற்பனை என்பது வியாபாரம் அல்ல! அதுவும் சமூக சேவையே!!

                    என 
TAMIL NADU SCIENCE FORUM-
             THALAVADY.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக