14 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-05

   அன்பு நண்பர்களே,
                  tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம். இன்று கிராம கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சிக்கான ஐந்தாவது நாள் .

          கல்கடம்பூர் மலைப்பகுதி உயர்நிலைப்பள்ளிக்கூடம்.மேலே உள்ள படம்.


     கல்கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆர்வமுடன் ஆய்வு செய்யும் காட்சி மேலே உள்ள படம்.

     மரியாதைக்குரிய மெய்யப்பன், ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கல்கடம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள கிராம கல்விக்குழு உறுப்பினர்களை வரவேற்று அனைவருக்கும் கல்வித்திட்டம் வட்டார வள மையம் சார்பாக கல்விக்கான வசதிகள் பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.        
   ''நாட்டாமைக்கல்வி'' என்னும் மிகச்சிறப்பான  கல்வி சீர்திருத்த நாடகம் அரங்கேற்றிய பள்ளி மாணவக்குழந்தைகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் மேலே உள்ளபடம்.


             மலைப்பகுதி பள்ளி மாணவக்குழந்தைகளின்  படைப்பாற்றலை வெளிப்படுத்திய திருமிகு.ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.ரகுபதி அவர்கள் விளக்கவுரையை ஆவலுடன் கேட்கும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் கிராமக்கல்வி உறுப்பினர்கள், மேலே உள்ள படம்.


      ஆசிரியர் பயிற்றுனர்களான 1)திருமிகு.ரகுபதி அவர்கள் மற்றும் 2)திருமிகு.மெய்யப்பன் அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டங்களை கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் கண்காணித்து பள்ளியின் நலனுக்காக அரசு செய்து வரும் அனைத்து வசதிகளையும்பயன்படுத்த வேண்டும் என  விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.
              மதிய உணவு பரிமாற்றம் மற்றும் கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இளைப்பாறும் காட்சி மேலே உள்ள படங்கள்.



          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மெய்யப்பன் அவர்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவக்குழந்தைகளின் வில்லுப்பாட்டு அனைவருக்கும் மகிழ்வூட்டும்! என பாராட்டிய காட்சி மேலே உள்ள படம்.


          ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவர்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சியளித்தது பற்றி அப்பள்ளி ஆசிரியர் விவரிக்க அதனை கேட்டறிகின்றனர் ஆசிரியர் பயிற்றுனர்கள்.

           இதோ ''பொது அறிவு தேவை'' என்பதை உணர்த்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.பங்கு பெற்ற மாணவக்குழந்தைகள் 1)சரத்பரணி.ரு. (2)கௌதம்.ப.(3)சுவேதா.கோ.(4)நியூபாரத்.சி. இவர்கள் நால்வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். ஐந்தாவதாக பரத்.சி. என்ற மாணவன் நான்காம் வகுப்பு.பயின்று வருகின்றனர்.

        கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கு.சக்திவேல்.இவர் ஓவியம் வரைவதில் மிகவும் திறமை உள்ளவர் என  அறிமுகப்படுத்தி வைக்கிறார் அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.பொ.மணி,B.Lit.,D.T.Ed.



  மேலே உள்ள இரண்டு படங்களும் மாணவன் சக்திவேல் அவர்களின் கைவண்ண ஓவியங்கள்.(இன்னும் மனித உருவங்கள்,இயற்கை காட்சிகள்,என  பல படங்கள் வரைந்துள்ளார்.)
     இன்று நடந்த இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,சத்தி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் ராமம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியை அப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.ஃப்ராங்க்ளின் மற்றும் தலைமை ஆசிரியை மரியாதைக்குரிய சரஸ்வதி அவர்களும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு  சர்வதேச பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திய விதம் பற்றியும் அதேபோல இங்கும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்படுத்தி ஊர்மக்களும் ஒன்றிணைந்து பள்ளியை சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    புகைப்படம் மற்றும் பதிவேற்றம்;- PARAMESWARAN.C
                                                             TAMIL NADU SCIENCE FORUM
                                                                       SATHY-THALAVADY

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக