04 ஜனவரி, 2013

சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-04

 மரியாதைக்குரிய நண்பர்களே,
                                              வணக்கம். 
        நான்காவது நாளான இன்று சாலைப்பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.



 திருமிகு.வெங்கட்ராஜ் அவர்கள்-தாளாளர் J.S.S.தொழிற்பயிற்சிநிலையம்-தாளவாடி அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்திய காட்சி.
 







    திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தலைவர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றிய காட்சி.


   
  திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்-கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை அவர்கள் கருத்தரங்கைத்துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி.

    கூகுள் ஆண்டவர் போதிய இட அளவு முடிவுற்றதாக அறிவித்த காரணத்தால் மேலும் படங்களைப்பதிவிட இயலவில்லை. மன்னிகவும்.

சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-03

 அன்பு நண்பர்களே,வணக்கம். 
                 சாலைப் பாதுகாப்பு வாரவிழா-2013 மூன்றாவது நாளான இன்று அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளையில் ஈஷா யோகா மையம்-மருத்துவக்குழுவினரின் இலவச மருத்துவ ஆலேசனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.




        

       ஈஷா யோகா மையம்-குழுவின் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயா அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை மேலாளர் அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்த காட்சி.


ஈஷா யோகா மையம்-குழுவினருடன் தாளவாடி கிளை மேலாளர் மற்றும் A.P.ராஜூ தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி & நடத்துனர் அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை மற்றும் திருமிகு.சிவன் அவர்கள் தொழில்நுட்ப பணியாளர் அவர்கள்.இடம்-தாளவாடி கிளை பணிமனை வளாகம்.

 
 

    திருமிகு.மருத்துவர் ஐயா அவர்கள் ஈஷா யோகா மையம் அவர்கள் குழுவினர் அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை பணிமனை வளாகத்தில் தொழிலாளர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய காட்சி.அருகில் கிளை மேலாளர் அவர்கள்-தாளவாடி கிளை.

   மருந்தாளுநர் அவர்களிடம் இலவச மருந்துப்பொருட்கள் வாங்கிய காட்சி.
 



சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013-02

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 













   


         இரண்டாம் நாளான இன்று தாளவாடிப்பகுதிய் அனைத்துப்பள்ளிகளிலும் 'விபத்து-விளைவு-பாதுகாப்பு'' என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு பற்றிய பள்ளிகளுக்கான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. டிவைன் மெட்ரிக் பள்ளி,சூசையபுரம் புனித ஜேம்ஸ் மேனிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,KGPV பள்ளி,திகினாரை புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளிகள் கலந்து கொண்டன.

02 ஜனவரி, 2013

ROAD SAFETY WEEK-2013 THALAVADY-ERODE Dt.


மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
      சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் சாலைப்பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் சமூகத்திற்கு நினைவூட்டம் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரம் அனைவராலும் விழிப்புணர்வு விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ......01-ஜனவரி-2013செவ்வாய்க்கிழமை இன்று காலை 10-00மணிக்கு......




 


  தாளவாடி காவல்துறை உதவி ஆய்வாளர் முன்பு அனைவரும் வாழ்க்கை வாழ்வதற்கே! குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டோம்!! என உறுதிமொழி ஏற்ற காட்சி.
 


சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013 தாளவாடி

STAY ALIVE !                                                                          DON't DRINK AND DRIVE!!
வாழ்க்கை வாழ்வதற்கே!           குடிபோதையில் வாகனத்தை இயக்காதீர்!!

                          24வது   சாலைப்பாதுகாப்பு வாரவிழா.
                
                 01-ஜனவரி-2013 முதல் 07-ஜனவரி-2013 வரை

          சாலைப்பாதுகாப்பு ஒருங்கிணைப்பு; 
            தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி.

                      நிகழ்ச்சிநிரல் விபரம்.

      நாள்-01-ஜனவரி-2013 செவ்வாய்க்கிழமை-
        நேரம் காலை 10-00மணி
இடம்-காவல்நிலையம்-தாளவாடி-
  சாலைப்பாதுகாப்பு பற்றிய அறிவுரையும்-உறுதிமொழி ஏற்பும்.
தலைமை-திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
       காவல்துறை ஆய்வாளர்,தாளவாடி

நாள்-02-ஜனவரி-2013 புதன் கிழமை
சாலைப்பாதுகாப்பு-கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி
இடம்; அனைத்துப்பள்ளிகள்-தாளவாடி.

     நாள்-03-ஜனவரி-2013 வியாழக்கிழமை.
நேரம்.மதியம்12-00மணி முதல் 3-00மணிவரை.
ஈஷா யோகா மையம்-மருத்துவக்குழுவினர் வழங்கும்
        மருத்துவ ஆலோசனை முகாம்.
  இடம்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை.

நாள்-04-ஜனவரி-2013 வெள்ளிக்கிழமை.
சாலைப்பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு.
நேரம்;காலை 10-00மணி முதல் 12-00மணி வரை.
தலைப்பு;சாலை விபத்துகளும்-விளைவுகளும்.
இடம்; J.S.S. I.T.I.மற்றும் பள்ளி வளாகம்.
தலைமை;திருமிகு.வெங்கட்ராஜ் தாளாளர் அவர்கள்-
       J.S.S. தொழிற்பயிற்சி நிலையம்-தாளவாடி.
முன்னிலை;திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,
      ஊராட்சி மன்றத்தலைவர்,
       தாளவாடி ஊராட்சி மன்றம்-தாளவாடி.
துவக்கி வைப்பவர்;திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்,
    கிளை மேலாளர்,
 அரசு போக்குவரத்துக்கழகம்-
 தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

    நாள்-05-ஜனவரி-2013 சனிக்கிழமை.
நேரம்;காலை 10-00மணி
 காவல் நிலையம் & தீயணைப்பு -மீட்பு நிலையம் & வனத்துறையுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.
இடம்; ஆசனூர் காவல்நிலையம் முன்பு (209-தேசிய நெடுஞ்சாலையில்)

   நாள்-06-ஜனவரி-2013 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்;காலை 10-00மணி
இடம்; பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம்,
       தாளவாடி.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வழங்கும் -கனரக வாகன ஓட்டுனர்களுக்கான உடல் நலம்,யோகா,முதலுதவி பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு. 

 நாள்-07-ஜனவரி-2013 திங்கட் கிழமை.
  சாலைப்பபாதுகாப்பு வாரவிழா  ஒருவார கால விழிப்புணர்வுப்பிரச்சாரம் நிறைவு நாள்.
  தாளவாடி வட்டார அனைத்துப் பள்ளி மற்றும் J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர்கள் மாபெரும் பேரணி .
 நேரம்;-காலை-10.00மணி.
பேரணி துவக்கி வைப்பவர்;-திருமிகு.K.P.ஜெயக்குமார்.B.E.அவர்கள்,வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,கோபிச் செட்டிபாளையம்-

 பொதுக்கூட்டம்;-காலை 10-30மணி,
இடம்;-பேருந்து நிலையம்-தாளவாடி.
தலைமை;-திருமிகு.C.பரமேஸ்வரன்.அவர்கள், தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம்.
முன்னிலை;-திருமிகு.கா.தங்கவேல் அவர்கள் காவல்நிலைய ஆய்வாளர்-தாளவாடி.
வரவேற்புரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி.
துவக்கவுரை;-திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர்,அவர்கள்,ஊராட்சி மன்றத்தலைவர்-தாளவாடி ஊராட்சி மன்றம்-தாளவாடி.
(சிறந்த தனியார் இலகுரக & கனரக வாகன ஓட்டுனர்களுக்கு பாராட்டும்,பரிசளிப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.)
சிறப்புரை;-
           திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,அவர்கள்-
                        மோட்டார் வாகன ஆய்வாளர்-நிலை-1 சத்தி-
         திருமிகு.M.முகுந்தன் அவர்கள்.B.E,
                மோட்டார் வாகன ஆய்வாளர்-    நிலை-2
            மோட்டார் வாகனப்போக்குவரத்து அலுவலகம்-
                       சத்தியமங்கலம்.
  திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்,கிளை மேலாளர்-
        தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-
             தாளவாடி கிளை.(ஈரோடு மண்டலம்)
திருமிகு.K.லோகநாதன் அவர்கள்,அவர்கள்,
  லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்-
திருமிகு.Dr.சுப்பராயன்,M.B.B.S., அவர்கள் -
                   ரோட்டரி கிளப்,தாளவாடி.
திருமிகு.சிவசாமி அவர்கள்,தலைவர்-
      ஒய்ஸ்மென் கிளப் ஆஃப் தாளவாடி.
திருமதி.ராஜம்மா அவர்கள்,
     உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சத்தியமங்கலம்.
திருமதி.சரோஜா, அவர்கள்,
    உதவி தொடக்கக்கல்வி அலுவலர்-தாளவாடி.
 மற்றும் அனைத்துப்பள்ளி ஆசிரியர்கள்,
     சமூக நல ஆர்வலர்கள்-தாளவாடி.
நன்றியுரை;-
         K.பாலமுருகன்B.A.,(stamp vendor) அவர்கள்
      பொருளாளர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,தாளவாடி.

             http;//konguthendral.blogspot.com, 
        http;//tnsfthalavady.blogspot.com,
       http;// tnsfsathy.blogspot.com.

சாலைப்பாதுகாப்பு-நமது பாதுகாப்பு-நாட்டின் பாதுகாப்பு என,
        தன்யா மொபைல்ஸ் & சக்திஸ்ரீமொபைல்ஸ்-சத்தி மெயின் ரோடு,சரவணம்பட்டி-கோயமுத்தூர்-641035. MOBILE-9047617993, & , 9944400126..

அனைத்துலக மனிதநேயம் போற்றும்....
       ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப்ஸ்,கோபி செட்டிபாளையம்.,MOBILE -09360008853


09 நவம்பர், 2012

அறிவியலைப் பரப்புவோம்! நாட்டின் வளர்ச்சியைப் பாதுகாப்போம்!!

மரியாதைக்குரிய நண்பர்களே,

      

(1)தீபாவளி நிகழ்ச்சியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம்.
(2)விபத்தின்றி,தீக்காயமின்றி கொண்டாடுவோம்.
(3)வாணவேடிக்கையின்போது பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் கருகி, சிதறிப்போன தொழிலாளிகளை நமது நினைவில் வைப்போம்.அவர்தம் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் அஞ்சலி செலுத்துவோம்.
(4)சுற்றுச்சூழல் பாதிக்காவண்ணம் கொண்டாடுவோம்.
(5)தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவும்,தொழிலாளர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்து மனித உயிர்களைக் காப்பது அரசின் கடமை,எனவே அரசாங்கத்திடம் வலியுறுத்துவோம்.
(6)அபாயகரமான வெடிகளைத் தவிர்ப்போம்.
(7)ஒலிமாசு குறைக்க சத்தம் குறைவான வெடிகளை வெடிப்போம்.
(8)மிதக்கும் தூசிகளைக் குறைக்க பட்டாசுகளை வாங்குவதையே தவிர்ப்போம்.
(9)வெடிகளின்போது கண் கண்ணாடி அணிந்து கண்களைக் காப்போம்.
(10) உடலைப் பாதுகாக்க பருத்தி ஆடைகளை அணிவோம்.
(11) சிறுவர்களையும்,சமூகத்தையும் பாதுகாக்க பட்டாசுகளின் ஆபத்தையும்,தீமைகளையும் தெரிந்து கொள்வோம்.

  என  சமூகப்பணியில் ;-
 PARAMESWARAN.C
TNSTC - DRIVER,
TAMIL NADU SCIENCE FORUM,
THALAVADY - SATHY-
ERODE - DT.

02 அக்டோபர், 2012

கணித மேதை ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விழா-2012

02 அக்டோபர் 2012

 


தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம். வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளிக்கும் விதமாக T.N.S.F.ஈரோடு- சார்பாக நடந்து வரும் நிகழ்வுகள் பற்றி இங்கு காண்போம்.
  

   இன்று (02-10-2012) ஈரோடு மாநகர்-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கணித மேதை ராமானுஜர் 125-வது ஆண்டுவிழா வரவேற்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

 முடிவற்றதைக் கண்ட மாமனிதன் கணித மேதை ராமானுஜர் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆண்டை மத்திய அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையத்தின் வழிகாட்டுதல் பேரில் கணித மேதை பிறந்த ஈரோட்டிற்கு பெருமை சேர்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மையத்தின் பொறுப்பில் நிறைவுவிழா நடத்த அறிவுறுத்தியதன் பேரில் இந்த வரவேற்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு  பேரா.V.பெருமாள் அவர்கள்  TNSF மாவட்ட துணைத் தலைவர்,அவர்கள் தலைமை ஏற்றார்.

திருமிகு.R.மணி அவர்கள் TNSF மாவட்டச் செயலாளர்,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் DR.பேரா.N.மணி அவர்கள் விளக்கவுரை நிகழ்த்தினார்

மரியாதைக்குரிய கணிதத்துறை பேராசிரியப்பெருமக்கள் உரைநிகழ்த்திய காட்சிகள்.











 திருமிகு.R. சக்கரவர்த்தி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உரையாற்றிய காட்சி


 மரியாதைக்குரிய,ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி

    திருமிகு.ஆ.கதிரேஷ் அவர்கள், கணித ஆசிரியர் . (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தட்டக்கரை-அந்தியூர்) உரை நிகழ்த்திய காட்சி.







 திருமிகு.பா.ஸ்ரீதர் அவர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு) உரை நிகழ்த்திய காட்சி.


 திருமிகு.M.பாலு அவர்கள் (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியல் கல்லூரி)உட்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.


 திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ERODE-) நன்றியுரை நிகழ்த்திய காட்சி.
    {இக்கூட்டத்தில் திருமிகு.சி.பரமேஸ்வரன் அவர்கள் (தலைவர்-தாளவாடி ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) உட்பட மேலும் பல கணித ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் உரை நிகழ்த்தினர்.}

   
     தேசிய கணித ஆண்டின் நிறைவு விழாவின் வரவேற்புக்குழுவிற்கு  


     தலைவராக- 
    திருமிகு.M.பாலகிருஷ்ணன் அவர்களும்
   (முன்னாள் செயலாளர்-கொங்கு கல்வி நிலையம் -ஈரோடு)
செயலாளராக 
   திருமிகு.R.மணி அவர்களும்
  (மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு)  துணைத்தலைவர்களாக 
     (1)திரு.M.பாலு அவர்கள்
   (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியற் கல்லூரி)
   (2)Dr.நாகராஜ் அவர்கள் (கணிதத்துறை தலைவர்-கொங்கு கலை அறிவியல் கல்லூரி) 
    (3)Dr.V.பெருமாள் அவர்களும் (T.N.S.Fஈரோடு.மாவட்ட துணைத் தலைவர்)     
(4)பேரா.R.விஸ்வநாதன் அவர்களும்(கொங்கு பொறியியல் கல்லூரி)

இணைச்செயலாளர்களாக 
   (1)திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்
 (தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஒன்றியம்)(2)திருமிகு,P.ஸ்ரீதர் ஆசிரியர் அவர்களும்
 (அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு வட்டார வள மையம்) (3)மரியாதைக்குரிய,பேரா. மேரி டயானா அவர்களும்
   (பாரதிதாசன் கலைக்கல்லூரி) 
  (4)திருமிகு.N.வேலுமணி அவர்களும்
   (செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)(5)திருமிகு.N.சண்முக சுந்தரம் ஆசிரியர்  அவர்களும்,
   குழு உறுப்பினர்களாக 
   ஈரோடு மாவட்ட TNSF செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது மற்றும் 
  மரியாதைக்குரிய டாக்டர்,பேரா.N.மணி அவர்கள் (T.N.S.F.மாநிலத்தலைவர்) தேசிய கணித ஆண்டின் நிறைவுவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொண்டு வழிகாட்டுவது.என இக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்) நன்றியுரை வழங்கினார்.





PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY - SATHY
ERODE-DT.