அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை சார்பாக சாலைப்பாதுகாப்பு வாரவிழா-''வாழ்க்கை வாழ்வதற்கே-குடிபோதையில் வாகனத்தை ஓட்டாதீர்'' என்னும் தலைப்பில் ஒருவார காலமாக பல்வேறு நிகழ்வுகளாக விழிப்புணர்வு செய்து வந்துள்ளோம்.
மிக முக்கியமான தகவல்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றோம்.அதாவது விபத்து ஏன் ஏற்படுகிறது?,எப்படி ஏற்படுகிறது? எங்கு ஏற்படுகிறது? என்ற காரணங்களையும்,விபத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? விபரீதங்கள்,இழப்புகள்,துன்பங்கள்,நமக்கு மற்றும் நமது தேசத்திற்கு ஏற்படுகின்றன.அதனைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு? பாதுகாப்பான பயணம்-நமக்கு அவசியம்.
மனிதத் தேவைகளுக்கு அத்தியாவசியமான
(1) உணவு-உண்டு உயிர்வாழ,
(2) உடை-உடுத்தி பண்பாடு பேண,நாகரீகமாக வாழ,
(3) இருப்பிடம் (தங்குமிடம்) நமது பாதுகாப்பிற்காக நமது உடைமைகள் பாதுகாப்பிற்காக, என வாழ,
(4) போக்குவரத்து-நமது தேவைகள் முழுமையடைய,பூர்த்தியடைய செய்ய
என நான்கு அத்தியாவசியத்தேவைகள் நமக்கு அவசியம் ஆகின்றன. ஆனால் நான்காவதான தேவையான "போக்குவரத்து" மட்டும்- அதிலும் சாலைப்போக்குவரத்து மட்டும் நமக்கு "உயிர் வாழ" என்பதை விட "உயிரை பலி கொள்ள" என்ற அவல நிலையில் உள்ளது. அதற்கான
பல்வேறு கருத்தரங்குகள்,விவாதக்களங்கள்,பேரணிகள்,பொதுக்கூட்டங்கள்,
விளம்பரப் பதாகைகள், விழிப்புணர்வு வாசக ஒட்டிகள் என்னும் ஸ்டிக்கர்கள் ,கட்டுரைகள்,கவிதைகள்,ஓவியங்கள் என பல நிகழ்வுகளைச்செய்து அருமையான பயனுள்ள தகவல்கள் பல கிடைக்கப்பெற்றோம்.
எனது பணி நிமித்தம் மற்றும் குடும்பச்சூழல்,உறவினர் சூழல் (எனது மாமா இறந்து ஒருவாரம் ஆகிறது இதுவரை துக்கம் அனுசரிக்கச் செல்ல இயலவில்லை- பொதுநலன் கருதி) மற்றும் பொங்கல் விழாவிற்காக வீடு சுத்தம் செய்யவேண்டி இருப்பதால் என காலச்சூழல் கருதிஅனைத்தும் பதிவிட இன்னும் ஒருமாத காலமாவது ஆகும்.
அதுவரை பொறுத்தருள வேண்டுகிறோம். என அன்புடன் C.PARAMESWARAN-TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY-ERODE Dt.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை சார்பாக சாலைப்பாதுகாப்பு வாரவிழா-''வாழ்க்கை வாழ்வதற்கே-குடிபோதையில் வாகனத்தை ஓட்டாதீர்'' என்னும் தலைப்பில் ஒருவார காலமாக பல்வேறு நிகழ்வுகளாக விழிப்புணர்வு செய்து வந்துள்ளோம்.
மிக முக்கியமான தகவல்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றோம்.அதாவது விபத்து ஏன் ஏற்படுகிறது?,எப்படி ஏற்படுகிறது? எங்கு ஏற்படுகிறது? என்ற காரணங்களையும்,விபத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? விபரீதங்கள்,இழப்புகள்,துன்பங்கள்,நமக்கு மற்றும் நமது தேசத்திற்கு ஏற்படுகின்றன.அதனைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு? பாதுகாப்பான பயணம்-நமக்கு அவசியம்.
மனிதத் தேவைகளுக்கு அத்தியாவசியமான
(1) உணவு-உண்டு உயிர்வாழ,
(2) உடை-உடுத்தி பண்பாடு பேண,நாகரீகமாக வாழ,
(3) இருப்பிடம் (தங்குமிடம்) நமது பாதுகாப்பிற்காக நமது உடைமைகள் பாதுகாப்பிற்காக, என வாழ,
(4) போக்குவரத்து-நமது தேவைகள் முழுமையடைய,பூர்த்தியடைய செய்ய
என நான்கு அத்தியாவசியத்தேவைகள் நமக்கு அவசியம் ஆகின்றன. ஆனால் நான்காவதான தேவையான "போக்குவரத்து" மட்டும்- அதிலும் சாலைப்போக்குவரத்து மட்டும் நமக்கு "உயிர் வாழ" என்பதை விட "உயிரை பலி கொள்ள" என்ற அவல நிலையில் உள்ளது. அதற்கான
பல்வேறு கருத்தரங்குகள்,விவாதக்களங்கள்,பேரணிகள்,பொதுக்கூட்டங்கள்,
விளம்பரப் பதாகைகள், விழிப்புணர்வு வாசக ஒட்டிகள் என்னும் ஸ்டிக்கர்கள் ,கட்டுரைகள்,கவிதைகள்,ஓவியங்கள் என பல நிகழ்வுகளைச்செய்து அருமையான பயனுள்ள தகவல்கள் பல கிடைக்கப்பெற்றோம்.
எனது பணி நிமித்தம் மற்றும் குடும்பச்சூழல்,உறவினர் சூழல் (எனது மாமா இறந்து ஒருவாரம் ஆகிறது இதுவரை துக்கம் அனுசரிக்கச் செல்ல இயலவில்லை- பொதுநலன் கருதி) மற்றும் பொங்கல் விழாவிற்காக வீடு சுத்தம் செய்யவேண்டி இருப்பதால் என காலச்சூழல் கருதிஅனைத்தும் பதிவிட இன்னும் ஒருமாத காலமாவது ஆகும்.
அதுவரை பொறுத்தருள வேண்டுகிறோம். என அன்புடன் C.PARAMESWARAN-TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY-ERODE Dt.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக