09 ஜனவரி, 2013

தாளவாடியில் சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013

அன்பு நண்பர்களே,வணக்கம். 
      சாலைப் பாதுகாப்பு வாரவிழா-2013 தாளவாடியில் நடைபெற்ற நிறைவு நாளான 07-01-2013  இன்று சத்தியமங்கலம்  மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் உட்பட பல்வேறு அரசுத்துறைகளைச்சார்ந்த அதிகாரிகளும்,ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும்,சமூக ஆர்வலர்களும்,சமூக நல அமைப்புகளும்,ஓட்டுனர்கள்,வாகன உரிமையாளர்கள்,பள்ளி மாணவ,மாணவியர்கள் உட்பட பேரணியில் மற்றும் பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்தனர்.



                தாளவாடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திருமிகு.சிங்காரவேலு அவர்கள் (நிலை-1) மோட்டார் வாகன ஆய்வாளர்  திருமிகு.முகுந்தன் அவர்கள் (நிலை-2) மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ,திருமிகு.பாபு அவர்கள்,திருமிகு. லோகு ஓட்டுனர் பயிற்சி பள்ளி அவர்கள்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ் அவர்கள்,டிவைன் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் அவர்கள்,ஜே.எஸ்.எஸ்.ஐ.டி.ஐ.மற்றும் தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர் சங்கத்தலைவர் திருமிகு.ஜோசப் அவர்கள் தாளவாடி.  சாலை பாதுகாப்புவார விழா ஒருங்கிணைப்பாளர் திருமிகு.C.பரமேஸ்வரன் இவர்களுடன் பள்ளி மாணவக்குழந்தைகள் பேரணி.





      திருமிகு.சிங்காரவேலு அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமிகு.முகுந்தன் அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ,இவர்களுடன் திருமிகு.பாபு அவர்கள்   தாளவாடி  மனித உரிமைகள் கழகம்  தலைவர்  மற்றும் லோகு டிரைவிங் ஸ்கூல் நிறுவனர் திருமிகு.லோகநாதன் அவர்கள்

               தாளவாடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத ஒற்றுமைக்கு இலக்கணம் வகுக்கும் இந்து & முஸ்லீம் புண்ணிய தலங்களின் முன்பு சாலைப்பாதுகாப்பு பேரணி ..


             சாலை பாதுகாப்பு நிறைவுவிழாவில் தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் தலைமை உரையாற்றிய காட்சி..

              திருமிகு.சிங்காரவேலு அவர்கள் (நிலை-1)மோட்டார் வாகன ஆய்வாளர்-சத்தியமங்கலம். சாலைப்பாதுகாப்பு பற்றிய விளக்க உரை.நம்ம தாளவாடியில்.


           திருமிகு.சார்லஸ் அவர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்-தாளவாடி   சாலைப்பாதுகாப்பு உரை.


             திருமிகு.முகுந்தன் அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 - சத்தியமங்கலம் நம்ம தாளவாடியில்  சாலைபாதுகாப்பு உரையாற்றிய காட்சி.


   திருமிகு.A.P. ராஜ் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மற்றும் அரசு போக்குவரத்துக்கழகம் நடத்துனர் அவர்கள் சாலைப்பாதுகாப்பு விழா பொதுக்கூட்டத்தில் வரவேற்பு மற்றும் சிறப்புரை.



         சிறந்த ஓட்டுனருக்கான பாராட்டும்,பரிசும் தாளவாடி டெம்போ ஓட்டுனர் திருமிகு.மணி அவர்களுக்கு திருமிகு.சிங்காரவேலு அவர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் பராட்டும் பரிசும் வழங்கினார்.சாலைப்போக்குவரத்தில் மற்ற ஓட்டுனர்களை விட  அனுசரிப்பு மற்றும் பொறுமையைக்கடைப்பிடித்தல் ஆகிய காரணங்களில்மற்ற ஓட்டுனர்களை விட அதிகம் கடைப்பிடித்ததாக  பொதுமக்களிடையே கருத்து சேகரிப்பு நடத்தி வழங்கப்பட்டது. மற்ற இரண்டு ஓட்டுனர்கள் கனரக வகன ஓட்டுனர்கள் பணி நிமித்தம் விழா மேடைக்கு வர இயலவில்லை.கரும்பு ஆலைக்கான ஒப்பந்த அடிப்படையில் கனரக வாகனம் ஓட்டுபவர்கள்.திருமிகு.மூர்த்தி ஓட்டுனர் மற்றும் திருமிகு.சலீம்   இவர்களுக்கான பரிசுகள்  பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகத்திற்கு கொடுத்து அனுப்பப்பட்டன. சாலை பாதுகாப்புக் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் தேர்வான பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான பரிசுகள்  அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.


          தாளவாடி கனரக வாகன ஓட்டுனர்களுக்காக சாலைப்பாதுகாப்புவாரவிழாவின் ஆறாவது நாளான கடந்த 06-01-2013 அன்று தாளவாடியில் உள்ள  பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகத்தில் 'யோகா' பற்றிய பயிற்சி மற்றும் விளக்கம் கொடுத்த   திருமிகு.S.ரமேஷ் அரசுபோக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளை ஓட்டுனர்  அவர்களுக்கு பாராட்டும் பரிசும் திருமிகு.மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள் வழங்கிய காட்சி. (திருமிகு.ரமேஷ் ஓட்டுனர் பாரதியார் பல்கலைக்கழகம்-கோயமுத்தூரில் யோகா பட்டயப்படிப்பு பயின்று வருகிறார்.)





  திருமிகு.வெங்கட்ராஜ் அவர்கள் J.S.S.I.T.I.தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஜெ.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி தாளாளர் அவர்கள் சாலைவிதிகளை மதிக்க வேண்டும் என உரையாற்றிய காட்சி.

      திருமிகு.மாதேஸ் அவர்கள் தலைமையாசிரியர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாளவாடி சாலைப்பாதுகாப்பு பற்றிய விளக்கவுரை  தமிழிலும்,கன்னடத்திலும் உரை நிகழ்த்திய காட்சி.

      திருமிகு.லெனின் அவர்கள் ஒய்ஸ்மென் கிளப் ஆப் தாளவாடி மற்றும் மனித உரிமைகள் கழகம் தாளவாடி சாலைப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு அளித்த காட்சி.


       திருமிகு.ஜோசப் ஓட்டுனர் மற்றும் தனியார் வாகன ஓட்டுனர் சங்கத்தலைவர் தாளவாடி அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.

      திருமிகு.ராயப்பன் அவர்கள் பொதுமக்கள் சார்பாக கன்னட மொழியில் சாலைப்பாதுகாப்பு பற்றிய விளக்கவுரை நிகழ்த்திய காட்சி.


           சாலைப்பாதுகாப்பு வாரவிழா ஒருங்கிணைப்பாளர் திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள், தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி மற்றும் அரசு போக்குவரத்து ஓட்டுனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்தக்கழகம்-தாளவாடி அவர்கள் நன்றியுரை நிகழ்த்திய காட்சி.
 பதிவேற்றம்.C.PARAMESWARAN DRIVER ( TAMIL NADU SCIENCE FORUM)
                             TAMIL NADU STATE TRANSPORT CORPORATION
                               THALAVADY BRANCH.
                              ERODE DIV.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக