02 ஜனவரி, 2013

சாலைப்பாதுகாப்பு வாரவிழா-2013 தாளவாடி

STAY ALIVE !                                                                          DON't DRINK AND DRIVE!!
வாழ்க்கை வாழ்வதற்கே!           குடிபோதையில் வாகனத்தை இயக்காதீர்!!

                          24வது   சாலைப்பாதுகாப்பு வாரவிழா.
                
                 01-ஜனவரி-2013 முதல் 07-ஜனவரி-2013 வரை

          சாலைப்பாதுகாப்பு ஒருங்கிணைப்பு; 
            தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி.

                      நிகழ்ச்சிநிரல் விபரம்.

      நாள்-01-ஜனவரி-2013 செவ்வாய்க்கிழமை-
        நேரம் காலை 10-00மணி
இடம்-காவல்நிலையம்-தாளவாடி-
  சாலைப்பாதுகாப்பு பற்றிய அறிவுரையும்-உறுதிமொழி ஏற்பும்.
தலைமை-திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
       காவல்துறை ஆய்வாளர்,தாளவாடி

நாள்-02-ஜனவரி-2013 புதன் கிழமை
சாலைப்பாதுகாப்பு-கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி
இடம்; அனைத்துப்பள்ளிகள்-தாளவாடி.

     நாள்-03-ஜனவரி-2013 வியாழக்கிழமை.
நேரம்.மதியம்12-00மணி முதல் 3-00மணிவரை.
ஈஷா யோகா மையம்-மருத்துவக்குழுவினர் வழங்கும்
        மருத்துவ ஆலோசனை முகாம்.
  இடம்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை.

நாள்-04-ஜனவரி-2013 வெள்ளிக்கிழமை.
சாலைப்பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு.
நேரம்;காலை 10-00மணி முதல் 12-00மணி வரை.
தலைப்பு;சாலை விபத்துகளும்-விளைவுகளும்.
இடம்; J.S.S. I.T.I.மற்றும் பள்ளி வளாகம்.
தலைமை;திருமிகு.வெங்கட்ராஜ் தாளாளர் அவர்கள்-
       J.S.S. தொழிற்பயிற்சி நிலையம்-தாளவாடி.
முன்னிலை;திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,
      ஊராட்சி மன்றத்தலைவர்,
       தாளவாடி ஊராட்சி மன்றம்-தாளவாடி.
துவக்கி வைப்பவர்;திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்,
    கிளை மேலாளர்,
 அரசு போக்குவரத்துக்கழகம்-
 தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

    நாள்-05-ஜனவரி-2013 சனிக்கிழமை.
நேரம்;காலை 10-00மணி
 காவல் நிலையம் & தீயணைப்பு -மீட்பு நிலையம் & வனத்துறையுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.
இடம்; ஆசனூர் காவல்நிலையம் முன்பு (209-தேசிய நெடுஞ்சாலையில்)

   நாள்-06-ஜனவரி-2013 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்;காலை 10-00மணி
இடம்; பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம்,
       தாளவாடி.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வழங்கும் -கனரக வாகன ஓட்டுனர்களுக்கான உடல் நலம்,யோகா,முதலுதவி பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு. 

 நாள்-07-ஜனவரி-2013 திங்கட் கிழமை.
  சாலைப்பபாதுகாப்பு வாரவிழா  ஒருவார கால விழிப்புணர்வுப்பிரச்சாரம் நிறைவு நாள்.
  தாளவாடி வட்டார அனைத்துப் பள்ளி மற்றும் J.S.S.தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர்கள் மாபெரும் பேரணி .
 நேரம்;-காலை-10.00மணி.
பேரணி துவக்கி வைப்பவர்;-திருமிகு.K.P.ஜெயக்குமார்.B.E.அவர்கள்,வட்டாரப் போக்குவரத்து அலுவலர்,கோபிச் செட்டிபாளையம்-

 பொதுக்கூட்டம்;-காலை 10-30மணி,
இடம்;-பேருந்து நிலையம்-தாளவாடி.
தலைமை;-திருமிகு.C.பரமேஸ்வரன்.அவர்கள், தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம்.
முன்னிலை;-திருமிகு.கா.தங்கவேல் அவர்கள் காவல்நிலைய ஆய்வாளர்-தாளவாடி.
வரவேற்புரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி.
துவக்கவுரை;-திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர்,அவர்கள்,ஊராட்சி மன்றத்தலைவர்-தாளவாடி ஊராட்சி மன்றம்-தாளவாடி.
(சிறந்த தனியார் இலகுரக & கனரக வாகன ஓட்டுனர்களுக்கு பாராட்டும்,பரிசளிப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.)
சிறப்புரை;-
           திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,அவர்கள்-
                        மோட்டார் வாகன ஆய்வாளர்-நிலை-1 சத்தி-
         திருமிகு.M.முகுந்தன் அவர்கள்.B.E,
                மோட்டார் வாகன ஆய்வாளர்-    நிலை-2
            மோட்டார் வாகனப்போக்குவரத்து அலுவலகம்-
                       சத்தியமங்கலம்.
  திருமிகு.T.ஆறுமுகம் அவர்கள்,கிளை மேலாளர்-
        தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-
             தாளவாடி கிளை.(ஈரோடு மண்டலம்)
திருமிகு.K.லோகநாதன் அவர்கள்,அவர்கள்,
  லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்-
திருமிகு.Dr.சுப்பராயன்,M.B.B.S., அவர்கள் -
                   ரோட்டரி கிளப்,தாளவாடி.
திருமிகு.சிவசாமி அவர்கள்,தலைவர்-
      ஒய்ஸ்மென் கிளப் ஆஃப் தாளவாடி.
திருமதி.ராஜம்மா அவர்கள்,
     உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சத்தியமங்கலம்.
திருமதி.சரோஜா, அவர்கள்,
    உதவி தொடக்கக்கல்வி அலுவலர்-தாளவாடி.
 மற்றும் அனைத்துப்பள்ளி ஆசிரியர்கள்,
     சமூக நல ஆர்வலர்கள்-தாளவாடி.
நன்றியுரை;-
         K.பாலமுருகன்B.A.,(stamp vendor) அவர்கள்
      பொருளாளர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,தாளவாடி.

             http;//konguthendral.blogspot.com, 
        http;//tnsfthalavady.blogspot.com,
       http;// tnsfsathy.blogspot.com.

சாலைப்பாதுகாப்பு-நமது பாதுகாப்பு-நாட்டின் பாதுகாப்பு என,
        தன்யா மொபைல்ஸ் & சக்திஸ்ரீமொபைல்ஸ்-சத்தி மெயின் ரோடு,சரவணம்பட்டி-கோயமுத்தூர்-641035. MOBILE-9047617993, & , 9944400126..

அனைத்துலக மனிதநேயம் போற்றும்....
       ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப்ஸ்,கோபி செட்டிபாளையம்.,MOBILE -09360008853


09 நவம்பர், 2012

அறிவியலைப் பரப்புவோம்! நாட்டின் வளர்ச்சியைப் பாதுகாப்போம்!!

மரியாதைக்குரிய நண்பர்களே,

      

(1)தீபாவளி நிகழ்ச்சியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம்.
(2)விபத்தின்றி,தீக்காயமின்றி கொண்டாடுவோம்.
(3)வாணவேடிக்கையின்போது பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில் கருகி, சிதறிப்போன தொழிலாளிகளை நமது நினைவில் வைப்போம்.அவர்தம் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் அஞ்சலி செலுத்துவோம்.
(4)சுற்றுச்சூழல் பாதிக்காவண்ணம் கொண்டாடுவோம்.
(5)தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவும்,தொழிலாளர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்து மனித உயிர்களைக் காப்பது அரசின் கடமை,எனவே அரசாங்கத்திடம் வலியுறுத்துவோம்.
(6)அபாயகரமான வெடிகளைத் தவிர்ப்போம்.
(7)ஒலிமாசு குறைக்க சத்தம் குறைவான வெடிகளை வெடிப்போம்.
(8)மிதக்கும் தூசிகளைக் குறைக்க பட்டாசுகளை வாங்குவதையே தவிர்ப்போம்.
(9)வெடிகளின்போது கண் கண்ணாடி அணிந்து கண்களைக் காப்போம்.
(10) உடலைப் பாதுகாக்க பருத்தி ஆடைகளை அணிவோம்.
(11) சிறுவர்களையும்,சமூகத்தையும் பாதுகாக்க பட்டாசுகளின் ஆபத்தையும்,தீமைகளையும் தெரிந்து கொள்வோம்.

  என  சமூகப்பணியில் ;-
 PARAMESWARAN.C
TNSTC - DRIVER,
TAMIL NADU SCIENCE FORUM,
THALAVADY - SATHY-
ERODE - DT.

02 அக்டோபர், 2012

கணித மேதை ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விழா-2012

02 அக்டோபர் 2012

 


தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையம். வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளிக்கும் விதமாக T.N.S.F.ஈரோடு- சார்பாக நடந்து வரும் நிகழ்வுகள் பற்றி இங்கு காண்போம்.
  

   இன்று (02-10-2012) ஈரோடு மாநகர்-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கணித மேதை ராமானுஜர் 125-வது ஆண்டுவிழா வரவேற்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

 முடிவற்றதைக் கண்ட மாமனிதன் கணித மேதை ராமானுஜர் 125-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ராமானுஜருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆண்டை மத்திய அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில மையத்தின் வழிகாட்டுதல் பேரில் கணித மேதை பிறந்த ஈரோட்டிற்கு பெருமை சேர்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மையத்தின் பொறுப்பில் நிறைவுவிழா நடத்த அறிவுறுத்தியதன் பேரில் இந்த வரவேற்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்திற்கு  பேரா.V.பெருமாள் அவர்கள்  TNSF மாவட்ட துணைத் தலைவர்,அவர்கள் தலைமை ஏற்றார்.

திருமிகு.R.மணி அவர்கள் TNSF மாவட்டச் செயலாளர்,அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் DR.பேரா.N.மணி அவர்கள் விளக்கவுரை நிகழ்த்தினார்

மரியாதைக்குரிய கணிதத்துறை பேராசிரியப்பெருமக்கள் உரைநிகழ்த்திய காட்சிகள்.











 திருமிகு.R. சக்கரவர்த்தி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உரையாற்றிய காட்சி


 மரியாதைக்குரிய,ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி

    திருமிகு.ஆ.கதிரேஷ் அவர்கள், கணித ஆசிரியர் . (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தட்டக்கரை-அந்தியூர்) உரை நிகழ்த்திய காட்சி.







 திருமிகு.பா.ஸ்ரீதர் அவர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு) உரை நிகழ்த்திய காட்சி.


 திருமிகு.M.பாலு அவர்கள் (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியல் கல்லூரி)உட்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.


 திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ERODE-) நன்றியுரை நிகழ்த்திய காட்சி.
    {இக்கூட்டத்தில் திருமிகு.சி.பரமேஸ்வரன் அவர்கள் (தலைவர்-தாளவாடி ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) உட்பட மேலும் பல கணித ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் உரை நிகழ்த்தினர்.}

   
     தேசிய கணித ஆண்டின் நிறைவு விழாவின் வரவேற்புக்குழுவிற்கு  


     தலைவராக- 
    திருமிகு.M.பாலகிருஷ்ணன் அவர்களும்
   (முன்னாள் செயலாளர்-கொங்கு கல்வி நிலையம் -ஈரோடு)
செயலாளராக 
   திருமிகு.R.மணி அவர்களும்
  (மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு)  துணைத்தலைவர்களாக 
     (1)திரு.M.பாலு அவர்கள்
   (நிர்வாகத் தலைவர்-சசூரி பொறியியற் கல்லூரி)
   (2)Dr.நாகராஜ் அவர்கள் (கணிதத்துறை தலைவர்-கொங்கு கலை அறிவியல் கல்லூரி) 
    (3)Dr.V.பெருமாள் அவர்களும் (T.N.S.Fஈரோடு.மாவட்ட துணைத் தலைவர்)     
(4)பேரா.R.விஸ்வநாதன் அவர்களும்(கொங்கு பொறியியல் கல்லூரி)

இணைச்செயலாளர்களாக 
   (1)திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்
 (தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஒன்றியம்)(2)திருமிகு,P.ஸ்ரீதர் ஆசிரியர் அவர்களும்
 (அனைவருக்கும் கல்வி இயக்கம் ஈரோடு வட்டார வள மையம்) (3)மரியாதைக்குரிய,பேரா. மேரி டயானா அவர்களும்
   (பாரதிதாசன் கலைக்கல்லூரி) 
  (4)திருமிகு.N.வேலுமணி அவர்களும்
   (செயற்குழு உறுப்பினர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)(5)திருமிகு.N.சண்முக சுந்தரம் ஆசிரியர்  அவர்களும்,
   குழு உறுப்பினர்களாக 
   ஈரோடு மாவட்ட TNSF செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது மற்றும் 
  மரியாதைக்குரிய டாக்டர்,பேரா.N.மணி அவர்கள் (T.N.S.F.மாநிலத்தலைவர்) தேசிய கணித ஆண்டின் நிறைவுவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொண்டு வழிகாட்டுவது.என இக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக திருமிகு.வைரமுத்து அவர்கள் (TNSF-ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்) நன்றியுரை வழங்கினார்.





PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM
THALAVADY - SATHY
ERODE-DT.  
  

 
 

19 செப்டம்பர், 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி கிளை: கணிதமேதை இராமானுஜம்.- இல்லம்.காண:     அன்பு நண்பர்களே,வணக்கம்.          தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ,மாநில தலைவர் அவர்களது கட்டுரை -TNSFTHENI.BLOGSPOT.COM வாயிலாக.......    ...

புத்தகங்களுடன் இலவச அலமாரி-ஈரோட்டில்



அன்பு நண்பர்களே,வணக்கம். 
             கடந்த 17-9-2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் திருமிகு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள்  அருமையான யோசனை ஒன்று தெரிவித்தார். 
             அதாவது எந்தப்பகுதியைச்சேர்ந்தவர்களானாலும் சரிங்க! புத்தக அலமாரி மற்றும் அறிவியல் உட்பட நல்ல தரமானபுத்தகங்களை வழங்கலாம். அதாவதுங்க!  பள்ளிகளுக்கோ,பொது இடங்களுக்கோ,விழாக்களுக்கோ,அனாதை இல்லங்களுக்கோ,பயிற்சி நிலையங்களுக்கோ,பெரிய பெரிய கம்பெனிகளுக்கோ,தொழிற்சாலைகளுக்கோ,மருத்துவமனைகளுக்கோ,முதியோர் இல்லங்களுக்கோ,தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கோ,அறிவுச்செல்வங்களைப்பெருக்க விருப்பமும் ஆர்வமும் உள்ள நன்கொடையாளர்கள் அன்பளிப்பாக கொடுக்கவோ அல்லது விருப்பமுள்ளவர்கள் விலைக்கு பெற்றுக்கொள்ளவோ தாங்கள் செய்ய வேண்டியது ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் கொடுத்தால் போதும். ஐந்தாயிரத்திற்கு உண்டான நல்ல தரமான புத்தகங்களுடன் இலவசமாக அந்த புத்தகங்களை அடுக்கி வைக்க கண்ணாடிபொருத்திய புத்தக அலமாரி கொடுக்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி மையம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்தில் கருத்துரையில் பதிவிடவும். அல்லது அருகில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களை அணுகவும்.

வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி


                    முயற்சிகள் தவறலாம்! முயற்சிக்க தவறக்கூடாது!!


 அன்பு நண்பர்களே,வணக்கம். 
                            நமது ஈரோடு மாவட்டம்- சத்தி வட்டம்- தாளவாடி ஊராட்சி ஒன்றியம் வட்டாரப்பகுதிவாழ் 'பிறமொழி' பேசும் மக்களுக்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(தாளவாடி மையம்)
        மற்றும்  டிவைன் மெட்ரிக் பள்ளி (தாளவாடி)உடன்  இணைந்து  தமிழ் மொழிப்பயிற்சி மையம்  ஏற்படுத்தி உள்ளது. 
          இந்த மொழிப்பயிற்சி மையம் தாளவாடி கொங்கள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ள தொட்ட காஜனூர்  டிவைன் மெட்ரிக் பள்ளியில் 18-09-2012 அன்று முதல் நடைபெறுகிறது.விருப்பமும்,ஆர்வமும் உள்ள இளைஞர் முதல் வயதானவர் வரை சாதி, மத, இன, மொழி, வயது ,பாலினம் வேறுபாடு இன்றி அனைவரும்  கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம்.இப்பயிற்சி சமூக நலன் கருதி இலவசமாக நடத்தப்படுகிறது.

        மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் - காரணம்.
      
               இத்தாலி நாட்டைச் சேர்ந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" (Constantine joseph beschi) என்னும் பெயருடைய கிறித்துவப் பாதிரியார் அவர்கள் கிறித்துவ சமயம் பரப்ப 1710 ஜூன்மாதம் 'லிஸ்பனில்' புறப்பட்டு 'கோவா' (இந்தியா) வந்து அங்கிருந்து 'கொச்சி' வந்து பிறகு கால்நடையாக 'அம்பலக்காடு' வந்து தங்கி மதுரையில் 'காமநாயக்கன்பட்டி' வந்து சேர்ந்தார்.
              தமிழ் உட்பட ஒன்பது மொழிகள் கற்றிருந்த போதிலும் தமிழின் இனிமை மற்றும் பெருமையினை உணர்ந்து   இத்தாலி மொழியிலிருந்த "கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி" என்ற தனது பெயரை "தைரிய நாதன்" என மாற்றினார்.பிறகு அந்தப்பெயர் வடமொழி என அறிந்து மீண்டும் "வீரமாமுனிவர்" என தனது பெயரை மாற்றி தமிழ் மீது அளவற்ற பற்று கொண்டார்.
          முதன்முதலாக பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தார்.மேலும் தமிழில் எழுத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்து எளிமையாக்கினார்.செய்யுள் நடையில் இருந்த 'சதுரகராதி' யினை பேச்சுத்தமிழில் படைத்தார்.அதனால் 'தமிழ் அகராதிகளின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
                 இலக்கியப்படைப்புகளை உரைநடையில் அறிமுகப்படுத்தினார்.இவருக்கு முன்னரே "தத்துவ போதகர்" (1577-1656) இவரது இயற்பெயர் "இராபர்ட் டி நொபிலி" (Robert de nobili) என்னும் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கிறித்துவ பாதிரியார் சமயம் பரப்ப இந்தியா வருகை தந்த போது  முதன்முதலாக  பிறமொழிக்கலப்போடு தமிழில் உரைநடை எழுதியுள்ளார்.எனினும் வீரமாமுனிவர் பிறமொழிக்கலப்பின்றி தூய தமிழில் உரைநடை எழுதினார்.
             உரைநடையில் வேதவிளக்கம்,வேதியர் ஒழுக்கம்,ஞானக்கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம்,பரமார்த்த குருவின் கதைகள்,வாமன் கதை, திருக்காவல் ஊர்க்கலம்பகம்,கித்தேரி அம்மன் அம்மானை, தேம்பாவனி என 23 உரைநடைகள் எழுதி உள்ளார்.உலகப்பொதுமறை நூலான திருக்குறளை இத்தாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
         இவ்வாறு செய்யுள்,உரைநடை,இலக்கணம்,அகராதி,மொழி பெயர்ப்பு,காவியம் என தமிழ்த்துறையில் பல சிறப்பான படைப்புகளை தந்து தமிழுக்காக செய்த தொண்டின்  நினைவாக  தாளவாடியில் மொழிப்பயிற்சி மையத்திற்கு வீரமாமுனிவர் பெயர் இட்டு அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளோம்.

      வீரமாமுனிவரின் முழு உருவச்சிலை உளுந்தூர்ப்பேட்டை அருகில் (6கிலோமீட்டர் தூரத்தில்)உள்ள கோணங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகிமாதா கோவிலில் அமைந்துள்ளது.
           வீரமாமுனிவரின் சரித்திரத்தை 1822-இல் வித்துவான் முத்துசாமிபிள்ளை அவர்கள் தமிழில் எழுதி வெளியிட்டு உள்ளார்.

TNSF ERODE பொதுக்குழு கூட்டம்-2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் 

 

 

      அன்பு நண்பர்களே,வணக்கம். 

             17-09-2012 இன்று மாலை5-30 மணிக்கு தமிழ்நாடுஅறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் TNGEA - அலுவலகத்தில்  நடைபெற்றது.


      மாநிலத்தலைவர் பேரா.ந.மணி அவர்கள் பொதுக்குழுக்கூட்டத்தில் விவாதித்த காட்சி.அருகில் திரு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.




      மாவட்ட செயலாளர் திரு.ர. மணி அவர்கள் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் பற்றி  ஏட்டில் பதிந்த காட்சி.அருகில் மரியாதைக்குரிய ரேவதி அம்மையார் அவர்கள் மலாய் சென்று கற்பித்தலில் எளிமை பற்றி ஆய்வுநூல் எழுதி சமர்ப்பித்து அதற்காக வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் ஆய்வு நூலை பார்வையிடும் செயற்குழு உறுப்பினர் திரு.வைரமுத்து அவர்கள்.

        பொதுக்குழு கூட்டத்தில்  முக்கிய நிகழ்வாக கணித மேதை இராமானுசர் பிறந்த ஊரான நமது மாவட்டத்தலைநகராம் ஈரோடு என்பதை வெளிநாடுகளைச்சேர்ந்த ஆய்வாளர்கள், கல்வியாளர்கள்,கணித மேதைகள்,அறிஞர்கள் அறிந்து அதன்விளைவாக நமது ஈரோடு நகருக்கு வருகை தந்து கணித மேதை இராமானுசர் பிறந்த வீட்டை அடையாளம் கண்டு செல்கின்றனர்.அவர்களுக்கு வழிகாட்டியாக பேரா.ந.மணி அவர்களே செயல்பட்டு கணித மேதை பிறந்த வீட்டை அடையாளம் காட்டி வருவதை சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த கட்டமாக கணித மேதை 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி இந்த வருடத்தை நமது அரசு தேசிய கணித ஆண்டாக அறிவித்து வருடம் நிறைவடைவதை ஒட்டி நிறைவு விழாவினை நமது ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக திரு.சக்கரவர்த்தி அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
         அடுத்து உரையாற்றிய திருமிகு. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகள் உட்பட பொதுஇடங்களில் விருப்பமுள்ள புரவலர்களைக்கொண்டு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்களை நூலக அலமாரியுடன் சேர்த்து வழங்கும் அற்புத யோசனையை தெரிவித்தார்.அதற்கான விபரம் வேண்டுவோர் தமிழ்நாடு அறிவியல் இயகம்-ஈரோடு மாவட்ட நண்பர்களை அணுகவும்.அல்லது இங்கு கருத்துரை இடவும்.ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் புத்தக அலமாரி இலவசமாக வழங்கப்படும்.என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.