05 ஜனவரி, 2012

23-வதுசாலை பாதுகாப்பு வாரம்-2012-கோபி செட்டிபாளையம்

  
                    


அன்பு நண்பர்களே,வணக்கம்.

   கோபி செட்டிபாளையத்தில் 5-1-2012 அன்று நடந்த 23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இதுங்க.மேலே உள்ள படம்.

   23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியைத்துவக்கிவைத்த கோபி வட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து விபத்தினைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கை என ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காட்சி.அருகில் கோபி செட்டிபாளையம் திருமிகு. நகராட்சித்தலைவி அவர்கள். மேலே உள்ள படம்.




          கோபி செட்டிபாளையத்தில் 23-வது சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிக்காக உடனடியாக ஒரே நாளில் கோபி வட்டார அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள்,உரிமையாளர்கள்,சமூக அமைப்புகள்,மகளிர் கல்லூரி என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த கோபி வட்ட காவல்துறை ஆய்வாளர் மரியாதைக்குரிய ஐயா,இளங்கோ அவர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப்பேரணி நடத்துவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி வாயிலாக அறிவுரை கூறுகிறார்.மேலே உள்ள படம்.




      கோபி செட்டிபாளையத்தில் 23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட சமூக அமைப்புகளில் ஒரு பகுதி இங்கு .




                                 நமது கோபி மாநகரில்05-01-2012 இன்றுகாலை 10-00மணிக்கு 23-வது சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவினை மரியாதைக்குரிய கோபி செட்டிபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஐயா, அவர்கள் சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்கூறினார்.

        திருமிகு.நகராட்சி மன்றத்தலைவி அவர்களும்,திருமிகு.வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்திருமிகு. ரகுபதி M.V.I. அவர்களும் மற்றும் இவ்விழாவினில் கலந்து கொண்ட அனைத்து சமூக ஆர்வலர்கள்,அமைப்புகள்,மோட்டார் வாகனம் சம்பந்த அனைவரின் சார்பாக ஒவ்வொருவர் சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்கூறினர்.

               பின்னர் மரியாதைக்குரிய துணைக்கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து பேரணியைத்துவக்கி வைத்தார்.பேரணியில்  கோபி P.K.R.மகளிர் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.மேலும் கோபி வட்டார அனைத்து சுற்றுலா வேன்,கார்,டெம்போ,ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நல சங்கங்கள்,காவல்துறையினர்,வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,வட்டாட்சியர் அலுவலர்கள்,பணியாளர்கள் என பல்வேறு சாலையைப்பயன்படுத்துவோர்கள் கலந்து கொண்டனர்.
            பேரணி காவல் நிலையத்திலிருந்து துவங்கி மத்திய பேருந்து நிலையம் சென்று நிறைவடைந்தது. 
             பதிவேற்றம்;- PARAMESDRIVER // 
          TAMIL NADU SCIENCE FORUM-THALAVADY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக