04 ஜனவரி, 2012

சாலைப் பாதுகாப்பு-2012

      அன்பு நண்பர்களே,வணக்கம். 
                   தாளவாடி ரோட்டரி சங்கம் 
              தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
                  தாளவாடி காவல்துறை மற்றும் தாளவாடி வட்டார அனைத்துப் பள்ளி மாணவ,மாணவியர் இவர்களுடன்
    சத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து 6-1-2012 இன்று நடத்தும் 
              23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
   ''விபத்தினால் வருவது துன்பம் - பாதுகாப்பினால் வருவது இன்பம்''
                   " ACCIDENTS BRING TEARS - SAFETY BRING CHEER"
  அன்புடையீர், பெருகி வரும் வாகனப்பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொறுமையில்லாமல் நமது அவசரத்தால் ,அலட்சியத்தால்,கவனக்குறைவால்,அனுசரிப்பு இல்லாததால்,சாலையை ஆக்கிரமிப்பு செய்வதால்,சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்வதால் -விபத்து ஏற்பட்டு அதனால் விலைமதிப்பில்லா உயிர் இழப்பும்,பொருட்சேதமும் ஏற்படுகின்றன.இதனைத் தவிர்க்கும் பொருட்டு இந்த சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் அனைவரும் கலந்து இனிய பயணத்தை உறுதி செய்து வீட்டையும்,நாட்டையும் காப்பீர்.
      
            உங்கள் கவனத்திற்கு
  ( 1) சாலைப்பாதுகாப்பு, உயிர்ப்பாதுகாப்பு.
  (2) சாலை விதிகளை மதிப்போம்,விபத்தினைத்தவிர்ப்போம்.
  (3) அனுசரித்து வாகனம் ஓட்டுவோம்.
  (4) அதிக வேகம்,விபத்தாக முடியும்.
  (5) பொறுமை கடலினும் பெரிது,மனித உயிர் அதனினும் பெரிது.
  (6) உங்கள் கவனம் ரோட்டின் மேலே. இருக்கட்டும்.
  (7) ஓடும் பேருந்தில் ஏறாதீர் அல்லது இறங்காதீர்.
  (8) வண்டி நின்றபிறகு இறங்குவீர்.
 (9)சரக்கு வாகனங்களில் பயணம் செய்யாதீர்.
 (10) குடி போதையில் வாகனம் ஓட்டாதீர்.
 (11) அதிக பாரம் ஏற்றாதீர்.
 (12) தலைக்கவசம் உயிர்க்கவசம்.
 (13)சாலையை ஆக்கிரமிப்பு செய்யாதீர்.
 (14)சாலையைக்கடக்கும்போது இருபுறமும் கவனித்து கடக்கவும்.
 (15) இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் செல்லாதீர்.
(16) செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்.
(17)குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்.
(18) தூக்கக்கலக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்.
 (19) போட்டிமனப்பான்மை வேண்டாம்.
  (20) கை சைகை சாலையின்மொழியாகும்.
   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக